அது ஏன்? அது ஏன்?
நான் ஏன் ஏதோ எழுதுகிறேன்
இரவெலாம் எழுதி அழிக்கின்றேன்
ஏன் எனைப் பற்றி இப்படி...
என்னிடமே நான் இத்தனை மறைக்கின்றேன்...
இவற்றை நினைத்தல் இதயம் திறத்தல்
எல்லாம் சொல்லுதல்... எல்லோரிடமும் சொல்லுதல்
அவசியமா? ரொம்ப முக்கியமா?
அது ஏன்? அது ஏன்?
அவன் உதடுகளில் எனது பெயர் பிடிக்கின்றது
அவன் ஏன் அதை உச்சரிக்கிறான்?
என் மனதை நச்சரிக்கிறான்?
பல கேள்விகளால் மனம் குங்குமப்பூவென கரைகின்றது
குல்மொஹர் அவிழ்கின்றது என் இரவுக் கனவுகளில்..
இந்தக் கனவுகளில் இருந்து மீள்வது
அவசியமா? ரொம்ப முக்கியமா?
அது ஏன்? அது ஏன்?
அடிக்கடி அவனைப் பார்த்து விட்டால்
அகம் குளிர்கிறது... மனம் சுகிக்கிறது
இதயத்தில் வேறொருவர் இருப்பது
இனமறியா ஒரு பயமே தருகிறது..
நடந்தது ..மனம் முறிந்தது.. அது ஏன்?
இன்னும் என்னை ஆட்டிப் படைக்கிறது
எல்லாம் சொல்லுதல்.. எல்லோரிடமும் சொல்லுதல்
அவசியமா? ரொம்ப முக்கியமா?
அது ஏன்? அது ஏன்?
எல்லாம் சரி... எல்லாம் சரி என்றிருந்தாலும்
ஏன் அவன் எதுவும் சொல்ல மறுக்கிறான்?
அது ஏன்? அது ஏன்?
எல்லாம் சொல்லுதல்... எல்லோரிடமும் சொல்லுதல்
அவசியமா? ரொம்ப முக்கியமா?
அது ஏன்? அது ஏன்?
--------_---------_------------------------
'ஐசே க்யோன்' என்று ரேகா பரத்வாஜ் குழைந்து குழைந்து பாடினால் நான் என்ன செய்வது?
எல்லாம் சொல்லுதல்... எல்லோரிடமும் சொல்லுதல் அவசியமா?
ரொம்ப முக்கியமா?
கேள்வி கேட்டு தோற்றேன்... ஆனால் கவிதை எழுதி வென்றேன்..
ஆம் என்றேன்... பதில் கொண்டேன்..
- மூழ்கிய கவிஞர் பாலசாண்டில்யன்