இன்னும் வாழ எனக்கு ஆசையிருக்காது
நீ மட்டும் என்னோடு இல்லையென்றால்
உன்னைக் காணும் போது
வசந்த காலம் வருவது தெரியும்
இருளிலும் கூட ஒளியாய்த் தெரியும்
நீ மட்டும் என்னோடு இல்லையென்றால்
உந்தன் அருகாமை கிடைக்காதிருந்தால்
கடல் சேரா நதி போல நின்றிருப்பேன்
கடல் சேர்ந்திருந்தாலும் ஓரலை வந்திழுக்குமெனை
நீ மட்டும் என்னோடு இல்லையென்றால்
இதயத்திலிருந்து குரல் எப்படி வந்தது
நம் உறவை விட பிரிவு பெரிதென்பதால் தான்
இன்று என் விழிநீரும் நல் முத்தாகுமா
நீ மட்டும் என்னோடு இல்லையென்றால்
(ஹமே அவுர் ஜீனேகி சாஹத் ந ஹோதி அகர் தும் ந ஹோதே - கேட்ட பின்னர்)
பிரதிபலிப்பு: பாலசாண்டில்யன்