Friday, December 22, 2023

Tamil ghazal

 இன்னும் வாழ எனக்கு ஆசையிருக்காது

நீ மட்டும் என்னோடு இல்லையென்றால்


உன்னைக் காணும் போது

வசந்த காலம் வருவது தெரியும்

இருளிலும் கூட ஒளியாய்த் தெரியும்

நீ மட்டும் என்னோடு இல்லையென்றால்


உந்தன் அருகாமை கிடைக்காதிருந்தால்

கடல் சேரா நதி போல நின்றிருப்பேன்

கடல் சேர்ந்திருந்தாலும் ஓரலை வந்திழுக்குமெனை

நீ மட்டும் என்னோடு இல்லையென்றால்


இதயத்திலிருந்து குரல் எப்படி வந்தது

நம் உறவை விட பிரிவு பெரிதென்பதால் தான்

இன்று என் விழிநீரும் நல் முத்தாகுமா

நீ மட்டும் என்னோடு இல்லையென்றால்


(ஹமே அவுர் ஜீனேகி சாஹத் ந ஹோதி அகர் தும் ந ஹோதே - கேட்ட பின்னர்) 


பிரதிபலிப்பு: பாலசாண்டில்யன்