Thursday, October 29, 2020

My poems

 நீ முழுமையானவன்

என்று நினைத்தால்
உன௧்குள் ௧ாதல் வருவதில்லை
உன௧்குள் இரு௧்கும் வெறுமை
உணர்ந்தால் தான்
௮ந்த மறுபாதியை
உயிரெனத் தேடுவீர்௧ள்
௮து தான் ௧ாதல் பிறக்கும் தருணம்...!
- பாலசாண்டில்யன்

அவமானப்படுத்த
ஆணவத்தோடு பேச
இடர்பாடு ஏற்படுத்த
ஈசனைப் பழிக்க
உயிருடன் கொல்ல
ஊமை போல் நடிக்க
எமன் போல நடக்க
ஏமாற்றிப் பிழைக்க
ஐக்கியமாகி நசுக்க
ஒற்றுமை பாழாக்க
ஓலமிட்டு அழுது நடிக்க
முட்டாள்களுக்கு தெரியாது
- பாலசாண்டில்யன்.

மழைத் தாயே
வானம் குழைத்தாயே
பூமி நனைத்தாயே
வெட்பம் குறைத்தாயே
மனதை நிறைத்தாயே
வளமை சேர்த்தாயே
வயலை இரக்கத்தோடு பார்த்தாயே
பருவம் பொய்க்காமல் அடிக்கடி
வா தாயே !
அண்டை மாநிலத்தில் கை நீட்டாமல்
தடுத்தாயே ...
மானம் காத்தாயே !
வணங்கி நிற்கிறோம் ...ஏற்பாயே !
- டாக்டர் பாலசாண்டில்யன்

மழை இல்லை என்றால்
காய்கிறது என்ற புலம்பல்
மழை பெய்து விட்டால்
பெய்கிறது என்ற புலம்பல்
சிலர் பள்ளம் என்றும்
சிலர் வெள்ளம் என்றும்
புலம்புவதை நிறுத்தி
மழையை ஆராதிப்போம்
வானுக்கு நன்றி சொல்வோம்
மழை இன்றி வாடி நிற்பதை விட
மழை வந்ததே என்று பாடி நிற்போம்
நமக்கு பிடிக்கா விட்டாலும்
மண்ணுக்கு பிடிக்கும் மழை ...
மறக்க வேண்டாம்
- டாக்டர் . பாலசாண்டில்யன்

காதலின்
முதற்புள்ளி
விழி
கடைசிப் புள்ளி
விழி நீர்
கறை கண்டவர்
பலர்
கரை கண்டவர்
இலர்

௮வ ௧ண்ணுல தூசி விழுந்தாலும்
௭ன் ௧ண்ணுல ஊசி விழுந்தா போல
துடி௧்குது என் மனசு...!!

Women Empowerment articles in www.indrayaseithi.com

 https://indrayaseithi.com/women/women-power-6/2020/10/5297/


https://indrayaseithi.com/special-news/women-power-5/2020/10/5164/


https://indrayaseithi.com/special-news/women-power-4/2020/10/5030/


https://indrayaseithi.com/special-news/women-power-3/2020/10/4831/


https://indrayaseithi.com/special-news/women-power-2/2020/10/4704/?fbclid=IwAR0XygkQCa50eg40vntsh59LAEN1I7mnSmp7UMsM9EqMqY_C2tate1rs_Z4


https://indrayaseithi.com/women/women-power-1/2020/09/4544/

Saturday, October 3, 2020

My article in www.indrayaseithi.com

 https://indrayaseithi.com/special-news/women-power-2/2020/10/4704/?fbclid=IwAR0XygkQCa50eg40vntsh59LAEN1I7mnSmp7UMsM9EqMqY_C2tate1rs_Z4