Saturday, August 24, 2024

ஒரு வரிக்கதைகள்:

 ஒரு வரிக்கதைகள்:

பாலசாண்டில்யன்
என்னுடைய பழையவை என்னை அழிப்பதற்குள் ஏதாவது செய்ய வேண்டும்.
---_--------
யார் அவள்... இந்த தொடர்சிந்தனை நெஞ்சை அழுத்தும் போது வருமா உறக்கம்?
-----------
வருவதெல்லாம் தங்குவதில்லை. அப்படித்தான் நீயும். ஆனால் உன் நினைவுகள் குளத்துப் பாசி போல..
_-------
உனக்கும் இரண்டு கண்கள் தான். ஆனால் உன் பார்வை வேறாயிற்றே...
--------
நான் உனக்கு முக்கியமென்று எப்படி அழுத்திச் சொல்வது.. தவிக்கிறது மனம்.
------------------------------
நம்பிக்கை அச்சாணியை உடைத்து விட்டு மன்னிப்பு கேட்கிறாயா...?!
--------------------------------------------
கடக்கத்தான் முயற்சிக்கிறேன் தூரத்தையல்ல... காலத்தை!
------------------------------------------------------
எனக்குள் நடக்கும் மனப்போராட்டத்தோடு புரண்டு புரண்டு படுத்தேன்.
------------------------------------------------