Thursday, December 4, 2014

My recent poems

எத்தனை முயன்றாலும்
என்னைப் பற்றி நானே
சித்தரிக்கவும் சிரிக்கவும்
இயலவில்லை
எத்தனை உரித்தாலும்
முடியாத வெங்காயம் போல்
எந்தன் மனம்...
- பாலசாண்டில்யன்


உன்னை அழகாகக் காட்டும்
கண்ணாடி அழகா?
உண்மையில் அழகாய் இருக்குமுன்
கண்கள் அழகா?
உனைப்பற்றிய எண்ணத்தில் தானே
நானும் அழகாய்த் தெரிகிறேன்....!
அழகே என்முன்னாடி வா....
கண்ணாடி போதும்....!!
- பாலசாண்டில்யன்


தப்பு செய்ய யாரும் பயப்பபடவில்லை
தெரிந்தால் தப்பாகி விடுமே என்று தான்.



சிலர் கண்ணால் சிரிக்கிறார்
சிலர் கண்ணால் எரிக்கிறார்
சிலர் கண்வலை விரிக்கிறார்


கடத்தியவன்
விடுவிக்கும் போது
தொடர்பில் இருங்கள்
என்றால் எப்படியிருக்கும்
அது போலத்தான்
கடந்த கால காதலி
தொடர்பில் இரு
என்பதும்.....!!


மதி மயக்கத்தில் சிலர்
கதி கலக்கத்தில் சிலர்
விதி மாற்றத்தில் சிலர்
சதி திட்டத்தில் சிலர்
துதி பாடுவதில் சிலர்
நிதி மேம்பாட்டில் சிலர்
புது நம்பிக்கையில் சிலர்
நீங்கள் எப்படி...?!
- பாலசாண்டில்யன்


அறிவாளிகளாக
அறிவிலிகளாக
அழகானவர்களாக
அழகு குறைந்தவர்களாக
அன்பானவர்களாக
அன்பற்றவர்களாக
அக்கறையுள்ளவர்களாக
அக்கறையற்றவர்களாக
அளிப்பவர்களாக
அள்ளுபவர்களாக
அகிலத்தில் மனிதர்கள்
அவர்களில் நாம் எப்பக்கம்?!
- பாலசாண்டில்யன்


யாருக்கும் பயமில்லை இங்கே - டாக்டர் பாலசாண்டில்யன்

குனிந்து கல் எடுத்தால்
நாய்கள் 
கோபித்து சத்தம் போட்டால்
பணியாட்கள்
பிரம்பு காட்டிப் பேசினால்
மாணவர்கள்
வரம்பு மீறிப் போகின்ற
மாடுகள்
கண்ணை உருட்டும் பெற்றோரிடம்
பிள்ளைகள்
மண்ணை எடுத்தாலும் நிற்காத
நதிகள்
சினந்து கொண்டு பேசினாலும்
மருமகள்கள்
மீசை வைத்த பூசணிக்கு
திருடர்கள்
கோட்டு போட்ட வைக்கோலுக்கு
பறவைகள்
கோல் எடுத்துக் காட்டினாலும்
குரங்குகள்
எத்தனை பேர் மாட்டினாலும்
ஊழல்வாதிகள்

No comments:

Post a Comment