Saturday, July 11, 2015

A #romantic song# composed by me

முட்டாள் மனது ரொம்ப முட்டாள் மனது - எத்தனை 
முட்டிக் கொண்டாலும் உன்னை ஏற்றும் இறக்கும் 
முட்டி மோதி மீண்டும் உன்னை அதில் ஏற்றும் 

முனகி ஓடிடும் உன்னை ஏன் மனம் தாங்கிச் சுமக்க 
முட்டாள் மனம் அது வீணாய் தினம் ஏங்கித் தவிக்க ....!

எங்கே நீ போனாலும் என் மனம் அங்கே தான் புரியுமா ?
என் பேச்சை அது கேட்காது உனக்கது சற்றும் தெரியுமா ?
மனமெனும் வாகனம் பயணம் போக வீதி எங்கே உண்டு ?
மனதை கட்டி வைக்க ஒரு விதி தான் எங்கே உண்டு ?  (முட்டாள்)

நிற்காது நீ போ எனக்குக் கவலையில்லை ஏனோ 
நிற்கும் என் மனம் ஓடும் புது தூங்காவனம் தானோ 
நிழல் தான் உனது எந்தன் மனது முட்டாள் மனது 
நீங்காது அது உனை விட்டு சிறிது ஒரு பொழுது   (முட்டாள்)

உன் மனம் வேறு என் மனம் வேறு புரியாததற்கு  
உன்னுள் உறைவது எந்தன் நினைவு தெரியாததற்கு 
உயிரே இரண்டு என்றாலும் மனங்கள் இணைந்த ஒன்று 
உனக்குள் இருக்கும் என்னைச் சுமக்கும் காதல் தினம் தின்று  (முட்டாள்)
- டாக்டர் பாலசாண்டில்யன் 

No comments:

Post a Comment