வார்த்தை சிறுகதைகள்
- பால சாண்டில்யன்
வந்து பார்ப்பவர்கள் தலை தெறிக்க ஓடுகிறார்கள்
நிலா திரும்பிப் பார்த்தாள், முகத்தில் ஓட்டைகள்
கடலலை திரும்பக் கொணர்ந்த ஒற்றைச் செருப்பு
துடித்து அடங்கிய மீன் குழம்பில் நிச்சலனமாக
நடுங்கும் விரலுடன் அவள் நெற்றியில் குங்குமமிட்டான்.
மெசேஜ் பார்த்தவள் பால் பொங்கியதைப் பார்க்கவில்லை
யாருமில்லா வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ் வண்டி
"நீ எவ்வளவு அன்பு செலுத்துகிறாயோ அவ்வளவு வலிக்கிறது... ஏன்"
மனதின் ஆழத்தில், நிச்சயம் உனக்கது தெரியும்...
நீ இன்றி தவிக்கிறேனா அல்லது உன்னுடன் இருந்த என்னை இழந்து தவிக்கிறேனா
தொடர்ந்தது வாழ்க்கை. ஆனால் முன் போல அல்ல...
இழந்தேனா... பெற்றேனா...
பார்க்கலாம் என்று சொன்னது பார்க்காமலே இருப்பதற்கா ?
No comments:
Post a Comment