Tuesday, April 15, 2014

அருகில் இருந்தும் அருமை அறியவில்லை


அருகில் இருந்தும் அருமை அறியவில்லை

காலையில் ஒரு முதியவர் வீட்டுக் கதவைத் தட்டினார். மரியாதைக்குரியவராக இருந்தார். உள்ளே அழைத்து அமரச் சொன்னேன்.

ஸ்ரீ ராம நாம வங்கி என்கிற ஒரு காகிதம் கையில் கொடுத்து சில வார்த்தைகள்
இனிமையாக மனதுக்குப் பிடிக்கும் வகையில் பேசினார்.

இல்லந்தோறும் இறை நாமம் என்கிற இயக்கத்தைப் பற்றியும் அதில் தனது வாழ்வை அர்பணித்துக் கொண்டு தொண்டு ஆற்றி வருவதையும் சுருக்கமாக விளக்கினார். தன்னை சுதந்திரமாக நாமப் பணிகள் செய்து வரும் நாம அடிமை என்றும் ஒரு வரி அறிமுகம் செய்து கொண்டார்.

எந்த வீட்டில் நாமம் சொல்லப் படுகிறதோ, நாமம் எழுதிய கையேட்டு பிரதிகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறதோ அதுவே கோவிலாகும் என்றார்.

1008 கோடி ராம நாமா எழுதிய நோட்டுகளை கோபுரமாக கட்டி வழிபாட்டு தலமாக மாற்றியுள்ளதை முன்வைத்தார்.

எங்கே என்று கேட்ட போது அது எங்கள் வீட்டிலிருந்து மிக அருகில் என தெரிய வந்தது. மாலையே நானும் என் மனைவியும் சென்று பார்த்து வியந்து போனோம்.சென்னை, திருக்கோவிலூர், ஆத்தூர், சேலம், கோவை, பாலக்கோடு, சிங்காரபேட்டை போன்ற ஊர்களில் க்ருஹ பிரதிஷ்டை செய்துள்ள விவரம் அறிந்தோம். இது தவிர புத்தகப் பிரசுரப் பிரிவு ஒன்றும் நடத்தி முக்கிய மகான்களின் புத்தகங்களும் அங்கே விற்கப் படுகின்றன. யார் வீட்டிலும் ரூபாய் 5000 செலுத்தினால் 3 மணி நேரம் ராம நாமம் சொல்லி 1 கோடி ராம நாமா எழுதிய கையேடுகளை நம் வீட்டில் பிரதிஷ்டை செய்து வைத்துச் செல்கிறார்கள். இது தவிர ஏழை எளியவர்களுக்கு நாம் கொடுக்கும் நிதி உதவியை வைத்து அன்ன தானமும் செய்கிறார்கள்.

இப்படி ஒரு அமைப்பு இருப்பதே தெரியாமல் பல வருடங்கள் இதே ஏரியாவில் இருக்கிறோமா என ஆச்சரியமும் வெட்கமும் கொண்டேன். இருப்பினும் இன்று காலை கேள்விப் பட்டு இன்றே போய் பார்த்தும் விட்டோமே என்று சந்தோஷமும் அடைந்தேன். மேலும் விவரங்களுக்கு :

ராம மந்திரம்,2/3 வினாயகம் தெரு, மேற்கு மாம்பலம் - இதுவே அந்த முகவரி.
தொடர்பு எண் : 24893736/9445693295.
 

No comments:

Post a Comment