Saturday, June 6, 2015

A #romantic# song of mine

நீளும் உந்தன் நேயம்  மீளும் எந்தன் நேரம் 
நாளும் புதிய மாயம் ஆறும்  எனது காயம் 

வாசமலராக வாசல் வந்து நிற்கும் நதியே 
பாசவலை காட்டி பாடித் திரியும் ஜதியே 
ஆசைமேலோங்க அலையும் எந்தன் ரதியே 
ஓசையில்லாமல் எனைச் சேரவந்த நிதியே 

கோடானு கோடி முகம் கண்டபின் சிரித்தாயே 
தேடாமல் எனையடைய யுகங்கள் பல பொறுத்தாயே 
வாடாமல் உயிர் தழைக்க பாசமழை பொழிந்தாயே 
நாடாமல் நின்னுயிரை நேயமுடன் அளித்தாயே 

முறைகள் தெரியாத வயதை மொழிபெயர்த்தாயே
குறைகள் இல்லாத பொழுதை எனக்களித்தாயே 
உரைகல் போன்ற மனதை உருக்கிவிட்டாயே 
நிறைகள் ஓங்கும் வாழ்வாய்  நீயிருப்பாயே 
- டாக்டர் பாலசாண்டில்யன் 

No comments:

Post a Comment