Tuesday, June 7, 2016

Romantic Compositions by Balasandilyan

உன் மூச்சினில் எந்தன் மூச்சு கலந்து
உயிர் மூச்சாச்சு..உன் பேச்சாச்சு
காற்றினில் உந்தன் வாசம் கலந்து
காதல் உண்டாச்சு சுவாசம் ரெண்டாச்சு
சேலை நதியில் நனைந்த மலரே
சாலை முழுதும் பறந்த மணமே
மாலை சுமந்து வருவேனே கணமே
மாலைப் பொழுதின் இக்கணமே...
நாவின் அசைவில் நாளும் மலரும்
நாதம் நீயெனில் நானே லயமாவேன்
பூவின் இதழில் நிறமாய் ஒளிரும்
வண்ணம் நீயெனில் நானே கதிராவேன்
- பாலசாண்டில்யன்

நீளும் உந்தன் நேயம் மீளும் எந்தன் நேரம்
நாளும் புதிய மாயம் ஆறும் எனது காயம்
வாசமலராக வாசல் வந்து நிற்கும் நதியே
பாசவலை காட்டி பாடித் திரியும் ஜதியே 
ஆசைமேலோங்க அலையும் எந்தன் ரதியே
ஓசையில்லாமல் எனைச் சேரவந்த நிதியே
கோடானு கோடி முகம் கண்டபின் சிரித்தாயே
தேடாமல் எனையடைய யுகங்கள் பல பொறுத்தாயே
வாடாமல் உயிர் தழைக்க பாசமழை பொழிந்தாயே
நாடாமல் நின்னுயிரை நேயமுடன் அளித்தாயே
முறைகள் தெரியாத வயதை மொழிபெயர்த்தாயே
குறைகள் இல்லாத பொழுதை எனக்களித்தாயே
உரைகல் போன்ற மனதை உருக்கிவிட்டாயே
நிறைகள் ஓங்கும் வாழ்வாய் நீயிருப்பாயே
- டாக்டர் பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment