களவுத் திட்டம் எனில் வாழ்வு சரியும்.
கனவுத் திட்டம் எனில் வானம் விரியும்.
கனவுத் திட்டம் எனில் வானம் விரியும்.
சுத்தி நடக்கத் தெரியணும் - விழிப்பு.
சுத்தி நடக்கறதும் தெரியணும் - விழிப்புணர்வு.
சுத்தி நடக்கறதும் தெரியணும் - விழிப்புணர்வு.
கேட்டு வாங்கினால் விஷயம்.
போட்டு வாங்கினால் விஷமம்
போட்டு வாங்கினால் விஷமம்
ஊழல் ஒரு மதம்
பரவுவதால் ....பலர் அதில் சேருவதால்
பரவுவதால் ....பலர் அதில் சேருவதால்
ஆத்திரம் மதியைக் கெடுக்கும்.
அமைதி நிம்மதியைக் கொடுக்கும்
அமைதி நிம்மதியைக் கொடுக்கும்
வாழ்வில் எப்போதும் நம் கூடவே வருவது நமது வெற்றி தோல்விகள் அல்ல. நமது குணாதிசயங்கள் தான். நற்பண்புகள் தான் நம் மொத்த வாழ்விற்கும் அடித்தளம்.
கடினமான விஷயங்களை எளிதாக முடிக்கலாம். எளிய விஷயங்கள் தான் மிக மிக சவாலானவை. நம் திறமைகளை சோதிப்பவை.
இலைகள் பல இருந்தாலும் செடி ஒன்று தான். கிளைகள் பல இருந்தாலும் மரம் ஒன்று தான். எண்ணங்கள் பல நூறு தோன்றி மறைந்தாலும் மனம் ஒன்று தான். வண்ணங்கள் பல காட்டி நின்றாலும் வானம் ஒன்று தான். ராகங்கள் லட்சம் இருந்தாலும் இசை ஒன்று தான்.
பார்வையாலும் வார்த்தையாலும் பிறர் வசியம் செய்தாலும் நம்மைக் கண்டறிந்து நமக்குள் வயப்படுவதே இன்பம்.
கற்றல் அழகு
கற்றது நம்முள் நின்று போகிறது
கற்பது மட்டும் ஏன் நிற்க வேண்டும் ?
கற்றது நம்முள் நின்று போகிறது
கற்பது மட்டும் ஏன் நிற்க வேண்டும் ?
ஆகாசக் கோட்டை என்றாலும் அஸ்திவாரம் இருக்கட்டும். இல்லையெனில் கண்ணை விட்டு மறைந்து விடும்.
பணத்துக்கு என்ன செய்வது, பணத்த என்ன செய்வது என்று இரு தரப்பினரும் குழம்பும் தருவாயில் நடுவுல கொஞ்சம் பணத்தக் காணோம்.
பேச்சு தேன் போல இனிமையானது
தேன் அளவு கொஞ்சம் என்றால்உயிருக்கு உரம்
தேன் அளவு மிஞ்சினால் உடல் மண்ணுக்கு உரம்
தேன் அளவு கொஞ்சம் என்றால்உயிருக்கு உரம்
தேன் அளவு மிஞ்சினால் உடல் மண்ணுக்கு உரம்
உள்ளதைச் சொல்லவே ஊடகங்கள்... உள்ளத்தைச் சொல்ல அல்ல...
வாழ வேண்டும் என்பதுஉயிர் நோக்கம்..சிறப்புடன் வாழ வேண்டும் என்பது
உயர் நோக்கம்!!
உயர் நோக்கம்!!
No comments:
Post a Comment