Friday, April 21, 2017

Power of Silence

மௌனமாக இரு 

கோபமாக இருக்கும் பொழுது 
மெளனமாக இரு 

எல்லா உண்மைகளும் தெரியாத பொழுது 
மெளனமாக இரு 

உண்மைக்கதை என்ன என்று விசாரிக்காவிடின் 
மெளனமாக இரு 

எளியவரை உன் வார்த்தை கொல்லுமென்றால் 
மெளனமாக இரு 

கேட்கும் நேரம் இது என்றறிந்தால் 
மெளனமாக இரு 

தூய்மையான விஷயத்தை 'தூ'வென்றாக்கும் மனநிலையில் 
மெளனமாக இரு 

பிறர் பாவங்களை தூற்றும் எண்ணம் வருகையில் 
மெளனமாக இரு 

உனது வார்த்தைகளை எண்ணி பின்னால் வருந்துவாய் எனில் 
மெளனமாக இரு 

உனது வார்த்தை தவறான அபிப்ராயம் உருவாக்குமென்றால் 
மெளனமாக இரு 

அது உனக்கு சம்பந்தமான விஷயம் இல்லையெனில் 
மெளனமாக இரு 

நீ சொல்லப்போவது பொய் என்று தெரிந்தால் 
மெளனமாக இரு 

உனது வார்த்தை பிறரின் மதிப்பைக் குறைக்குமெனில் 
மெளனமாக இரு 

உனது பேச்சு நட்பை பாதிக்கும் என்றால் 
மெளனமாக இரு 

சத்தமின்றி சொல்ல முடியாது என்றால் தெளிந்து நீ 
மெளனமாக இரு 

உனது பேச்சு விளைவுகளை உண்டாக்கும் எனில் 
மெளனமாக இரு 

உனது பேச்சு நல்ல விளைவை உண்டாக்காது எனில் 
மெளனமாக இரு 

உனது வார்த்தையை பின்னாளில் நீயே முழங்க வேண்டுமெனில் 
மெளனமாக இரு 

ஏற்கனவே இப்படிப் பேசியம் பயனில்லை என்றால் 
மெளனமாக இரு 

கெட்டவரை புகழ வேண்டும் என்று தெரிந்து விட்டால் 
மெளனமாக இரு 

பேசுவதை விட நல்ல பணி இருக்கும் பொழுது சற்று 
மெளனமாக இரு 

உனது பேச்சு உனக்கோ பிறருக்கோ நன்மை பயக்காது எனில் 
மெளனமாக இரு 

- தமிழில் டாக்டர் பாலசாண்டில்யன் 
(In English - Murali Srinivasan)

No comments:

Post a Comment