Saturday, September 30, 2017

On Friendship - a poem by Balasandilyan

நட்பு 

நினைவு எனும் சாவி போட்டு 
மனதைத் திறந்த பொழுது 
உலகின் எந்த மூலையில் எனது 
உன்னத நண்பர்கள் இருக்கிறார்களோ ?
யோசித்தாலும் விடை கிடைக்கவில்லை.
சில நினைவுகள் மட்டும் 
சிந்தனை தூண்டும் 
மணம் வீசும் புது மலரகளைப் போல 
அந்த வாய்க்கால் கரைகள் 
நதிக்கரை மணல்வெளிகள் 
பின்னர் கல்லூரி கட் அடித்துப் 
பார்த்து நின்ற கமல் படங்கள் 
இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. 
தொடர்பில் இருப்பவர்கள் ஒரு சிலரே 
தொடர்பில் இல்லாத நண்பர்கள் எங்கிருக்கிறாரோ 
எல்லாம் மாறிவிட்டது...வாழ்க்கை முறைகள் 
வாழும் முறைகள் ...இயந்திரமாய் இறுக்கமாய் ..
சிலருக்கு வேலையில் இருந்து ஓய்வு இல்லை 
சிலருக்கு நட்பு உறவுகள் தேவை இல்லை 
மாறிவிட்ட உலகில் இன்று நமக்கு நாமே 
மாறினோம் உறவாக...நட்பாக...இல்லையேல் 
முகவரி கூட தெரியாத முகநூல் நண்பர்கள் நடுவில் 
மூழ்கிய தினங்கள்...மாயமாகும் நிமிடங்கள் 
என்று மாறி விடுமா நமது அனுதினங்கள் 
கொஞ்சம் கொஞ்சமாக வயது கூடி ஆயுள் குறைகையில் 
வாழக்கை நினைவுகளின் புத்தகமாகி விட்டது 
பக்கங்கள் யாவும் பழைய நினைவுகள் 
பக்கத்தில் இருப்பவர் முகநூல் பக்கத்தில் இருப்பவர் 
அக்கறை இருப்பினும் ஏதோ ஒன்று குறைகிறதே 
என்றாலும் இன்று தேர்ந்து எடுத்த எனது நண்பர்களின் 
நட்பும் அன்பும் நான் செய்த தவமே...நான் பெற்ற வரமே...
சில நேரம் அந்த முகம் மறந்த ..பெயர் மறந்த 
நண்பர்கள் குழாம் நினைவுக்கு வந்தாலும் 
நினைவுகளுக்கும் வயதான விஷயம் புரிகிறது 
அவ்வப்போது நினைத்து நான் சிரிக்கும் தருணம் 
அட புதிய நண்பர்கள் எத்தனை பேர் 
ஆயிரம் ஜென்மங்கள் பழகியது போல இன்று கிடைத்துள்ளது  
ஆண்டவன் என் மீது காட்டிய கருணை தானே 
அபூர்வம் தானே இப்படி கிடைக்கும் நட்புகள் உறவுகள் 
அதனால் தான் இருக்கிற  எனது நட்பு பொக்கிஷங்களை 
ஆழ அகலமான நூலாக எழுதினேன் ...தினம் ஒருவராய் 
அவர்களை பெற்றதும் அவர்களிடம் கற்றதும் 
ஆனந்தம் தான் நினைத்துப் பார்க்கும் ஒவ்வொரு 
அற்புத தருணமும் ...ஆன்மா ஆனந்தமாக சிரிக்கிற
அமைதியாக உதிர்க்கிற நீண்ட மூச்சுக்களின்   
அழகை உணர்கிறேன் ...அழகாய் உணர்கிறேன் 
நட்புகள் அனைவருக்கும் பணிவன்புடன் 
இதோ உங்கள் பாலசாண்டில்யனின் சமர்ப்பணம் இந்நூல்
இன்றே படியுங்கள்...நீங்களும் இது போல் ஒன்று வடியுங்கள் 
இன்பமுறட்டும் உங்கள் ஆன்மா ...இதமுறட்டும் இதயம்.!!

No comments:

Post a Comment