நீயின்றி நானும் வாழ்வதில்லை
என்ன சொல்லி புரிதல் செய்ய
என்னிதயம் பணி புரிதல் இல்லை
எனதன்பு சொன்னால் புரியுமா
நீயே எந்தன் வாழ்வு தெரியுமா
உன்னிதயத் துடிப்பு நான் தான்
உனது பாதை எனது பயணம்
எளிதாய் இருந்திருக்கும் வாழ்வு
என் விழிகள் திறக்காதிருந்தால்
என் வாழ்வு இனி நீ தான் நம்பு
இன்னும் அனுப்பாதே கண்ணால் அம்பு
பாதை மாறிய பயணம் எனது
பாவை உன்னை சுற்றுது மனது
நீயே ஆனது எந்தன் புது உலகு
உன் பார்வை என் முகத்தில் அலகு
பணிந்தேன் உன் சம்மதம் கேட்டு
பரிவாய் இனி இன்முகம் காட்டு
- பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment