அன்புள்ள அம்மா
உன்னையே தந்து விட்டாய் நான் வாழ - அம்மா ( என்ன)
எண்ணிலா தியாகங்கள் செய்தனை நீ அம்மா
எதனையும் சொன்னதில்லை பெருமை கொள்ள
உறக்கம் தொலைத்து நீ எனைக் காத்தாய் - உன்
உயிரைப் பணயம் வைத்து எனை வளர்த்தாய் ஆ ஆ (என்ன)
உன் தமிழ் ஆற்றலை எனக்களித்தாய் அம்மா
உன்னாலே கவியானேன் உண்மை தானம்மா
என் நிலை ஓங்கிட எத்தனை பாடுபட்டாய்
என்றுமே என்னுயர்வில் முழுதுமாய் ஈடுபட்டாய் ஆ ஆ ( என்ன)
- பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment