மலர் மனம்
காலை இளம் வெயில்
போலே இதமாக
இருக்கும்
வேளையில்
மழையில் நனைவது
போலுள்ளது
ஏனோ.. ஒரு இனம் புரியாத
பயமும் தொடர்கிறது... ?!
சில விஷயங்களை
நினைக்கிறேன்
சில விஷயங்களை
எழுதுகிறேன்
சில விஷயங்களை
சொல்கிறேன்
சில விஷயங்களை
எழுதி அழிக்கிறேன்
சிலவற்றைஎழுதி
பின்னர் கிழிக்கிறேன்
எல்லாவற்றையும்
எல்லோருக்கும்
சொல்ல வேண்டும் என்று
என்ன கட்டாயம்...?!
உன் உதடுகள்
என் பெயரை உச்சரிக்கும் போது
குல்மொஹர் பூக்கள்
உதிர்வது போலுள்ளது...!!
எனக்குள் என்ன நடக்கிறது
என்பதை மனதில்
எண்ணி மகிழ்கிறேன்
எல்லாவற்றையும்
எல்லோருக்கும்
சொல்ல வேண்டும் என்று
என்ன கட்டாயம்...?!
- பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment