Thursday, January 5, 2023

Song for self-confidence

 எசைப்பாட்டு படிச்சேன் கவிஞர் யுகபாரதி கவிதை ஒன்று படித்த பின்னர்:

காற்றுக்கு மரமுண்டு
நீருக்கு வானுண்டு
நெஞ்சுக்கு நீயுண்டு
சுகந்தான் அன்பே
தமிழுக்கு உரமுண்டு
தழுவிட கரமுண்டு
தாமதம் செய்யாது
அருகே வா முன்பே
எந்நாளும் நன்னாளே
இருளென்றும் நீளாது
சஞ்சலமேன் கண்ணே
நன்மைபல செய்து விட
துன்பங்கள் மாறும்
கலவரம் இனியேது
எண்ணங்கள் வரும்போகும்
எழுந்திரு இனிதாக
காற்றும் மழையும்
எல்லோர்க்கும் ஒரு சுகம்
காடும் மரமும்
கண்களுக்கு புது வரம்
நில்லாது சுழலும் பூமி
நிம்மதி தரும் சாமியே
கம்பியிட்டு தடுத்தாலும்
காதல் மாறாதம்மா
காலம் பதில் சொல்லுமே
கல்லுக்குள் கடவுளுண்டு
கணமொன்றில் புரிந்தால்
கவலைகள் பறந்தோடும்
கனவுகள் நனவாகுமே
- பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment