Friday, February 22, 2013

Kaathal kavithaigal

1.எனக்கு மதம் பிடிக்கும்
அது உன் சம்மதம்
எனக்கு நகை பிடிக்கும்
அது உன் புன்னகை
எனக்கு கோலம் பிடிக்கும்
அது நம் மணக்கோலம்


2. என் மனம் சொல்வதை
குறித்து வைத்துக் கொண்டேன்
எல்லா தடவையும்
உன் பெயர் தான்
என் இதயத் துடிப்பை
உற்றுக் கேட்டேன்
அது லப் டப் அல்ல
லவ் லவ் தான்

3.ஆயுள் முழுவதும்
உனக்கு பணிவிடை செய்கிறேன்
உன் விடை என்ன ...?
நீ சொன்னாய் பிரியாவிடை ...!

4.ஒரு கிளியின் அலகில்
பலரின் எதிர்காலம்
ஒரு மயிலின் நடனத்தில்
பல வயல்களின் பயிர்காலம்
ஒரு தீக்குச்சிக்கு
அடக்கமாகும் பல மரங்கள் - உன்
ஒரு புன்னகைக்கு
அடங்கிப்போகும் பல மனங்கள் !

5.கருப்பை இல்லை என்றால் குழந்தை இல்லை
இரைப்பை இல்லை என்றால் உணவு இல்லை
பணப்பை இல்லை என்றால் வாழ்வு இல்லை - உன்
நினைப்பே இல்லை என்றால் நானே இல்லை ...!

6. கட்சி உடைந்த போது தொண்டர் கலவரம்
ஆட்சி கவிழ்ந்த போது தேசக் கலவரம்
சிலை உடைந்த போது இனக்கலவரம்
மசூதி உடைந்த போது மதக்கலவரம்
எதனால் சொல் எதனால் இம்மனக்கலவரம் ?!

- டாக்டர் பாலசாண்டில்யன் 

--

No comments:

Post a Comment