Tuesday, February 26, 2013

poem about 'Anger' by Dr.Balasandilyan

சச்சின் போன்றவர்கள் விளையாட்டில்
ரஹ்மான் போன்றவர்கள் இசையில்
கமல் போன்றவர்கள் நடிப்பில்
தொழிலாளிகள் தமது வேலையில்
வேலைக்காரிகள் பாத்திரத்தில்
ஓட்டுனர்கள் வேகத்தில்
குழைந்தைகள் சத்தத்தில்
காதலிகள் முத்தத்தில்
மாணவர்கள் பதிவேட்டில்
தந்தைகள் பாக்கெட் பணத்தில்
அதிகாரிகள் தாமதம் காட்டி
மனைவிகள்  சாப்பாட்டில் ...படுக்கையில்
கோபத்தை வெளிபடுத்துகிறார்கள் !
இயலாதவர்கள் மட்டுமே
வார்த்தையாலும் ஆயுதத்தாலும்
கோபத்தை வெளிபடுத்துகிறார்கள் !
கோபத்தை வெளிகாடுவதும் ஒரு கலை தான்.!!

No comments:

Post a Comment