Friday, February 22, 2013

Practically speaking....!

 யதார்த்தமாய் சில வார்த்தைகள்

வாய் அழுக்கு போகும் என்று
கொப்பளித்து உமிழ்ந்து விட்டு
உற்றுப் பார்த்தால்
குழாய் நீரே அழுக்கு !

மூச்சு முட்டிட
காற்று உள்ளிழுத்தேன்
தும்மல் வந்து மூக்கைச் சிந்தினால்
கருப்பாய் என் சளி !

பணம் பணம் என்று உழைக்கக் குனிந்தேன்
பணத்தோடு நிமிர்ந்த போது
நான் நிறுவனச் சங்கிலியால்
கட்டுண்டு கிடக்கிறேன் !

பசியினால் வந்த வயிற்று வலி போக
ஹோட்டல் நுழைந்து உண்டேன்
உண்டதால் வந்த வயிற்று வலி போக
ஆஸ்பத்திரி நுழைந்து விட்டேன் !

மனசு சரியில்லை என்று
தொலைக்காட்சி பார்த்தேன்
பார்த்து முடித்த காட்சிகளால்
மனசு சரியில்லை ...அணைத்தேன் !

வந்த ரணங்களால் மனம்
தந்த வலிகளும் உடனே
சொந்த வரிகளாய் கவிதை ஆனது !
நொந்த மனம் சற்று லேசாய் போனது !!

- டாக்டர் பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment