Tuesday, September 1, 2020

ஊர் தொடங்கு - Poem

 ஊர் தொடங்கு

ஆலயங்களில்
தொற்று தொற்றிடாதிருக்க
பக்தர்கள் வேண்டுதல்
நூலகங்களில்
புத்தகங்கள் புன்னகைப்பு
பூங்காக்களில் பாதசாரிகள்
பாதம் பதிப்பு
நூற்றைம்பது நாட்கள் கடந்து
பேருந்துகள்
சாலை தொட்டு புகை விட்டன
மாஸ்க் எடுத்த வானம்
மங்கல நீர் தெளித்து
ஊரடங்கு முடக்கத்தை
கை கழுவியது மழை
மைனஸ் 23.9 % தொட்டது
ஜிடிபி வளர்ச்சி
சரிவிலிருந்து மீள்கிறது
நாட்டின் பொருளாதாரம்
சரியாமல் சரியாக
எழ வேண்டும்
மனித இனம்
கொரோனாவை விரட்ட
நினைக்கும்
ராகு கேது
இடம் பெயர்க்கட்டும்
பூமி கிரகம் விட்டு
- பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment