Thursday, February 26, 2026
பூங்காத்து
பூங்காத்து - நாட்டுப்புற மெட்டு
பாடல் வரிகள்: டாக்டர் பாலசாண்டில்யன் Balasubramanian Kalyanaraman
பல்லவி:
கூழாங்கல்லு சேராதோ - இந்தக்
கருங்கல்லு கூட்டத்துல?
பொட்டை நிலத்துல - நான்
பட்டுனு வீசும் பூங்காத்து!
உன்னால வெறுங்கையும் - இப்போ
உசிரே ஒட்டும் பூங்கொத்து!
ஒத்தப் பார்வையில - என்ன
ஓரம் கட்டும் பூங்காத்து!
அனுபல்லவி:
கள்ளிக்காட்டு முள்ளுக்குள்ள - ஒரு
கள்ளிப்பூ இப்போ மலந்தாச்சு!
அள்ளி அத நான் சூடிக்க - என்
அறிவும் இப்போ தொலைஞ்சாச்சு!
கல்லு மேல கல்லு வெச்சு
கட்டுன வீடு இது - உன்
சொல்லு மேல சொல்லு வெச்சா
சொர்க்கமா இப்போத் தோணுது!
சரணம்:
ஆள மயக்கும் ஒன் சிரிப்பு
அடிநெஞ்சில் குடி இருக்கு!
நாளப் பாக்கும் காத்துக்கிப்போ
நம்ம வாசம் தெரிஞ்சுருக்கு!
முரட்டுப் பய நானும் - இப்போ
முழுசாத்தான் மாறிப்புட்டேன்!
வரப்பு மேல ஒன் நிழல
வரமாத்தான் ஏத்துக்கிட்டேன்!
வசந்தமே பூக்களைத் தூவ
Baharon mein phool barsao
தமிழில்... ஒரு முயற்சி
- பாலசாண்டில்யன்
வசந்தமே பூக்களைத் தூவு
(பல்லவி)
வசந்தமே பூக்களை வாரித் தூவு
வந்தாள் என் காதலி இன்று!
வந்தாள் என் மனதை வென்று!
இசை பாடி வா இளந்தென்றல் காற்றே
வந்தாள் என் காதலி இன்று!
வந்தாள் என் மனதை வென்று!
(சரணம் - 1)
ரோஜாவின் இதழ் போன்ற செந்நிற மருதாணி
அவள் மென்மைக் கரங்களில் அழகு சேர்க்கட்டும்!
கார்மேகம் இறங்கி வந்து அவள்
கூர்விழி ஓரம் மை தீட்டட்டும்!
நெற்றியின் உச்சியில் நிலவைச் சூட்டி மெல்ல
வந்தாள் என் காதலி இன்று!
வந்தாள் என் மனதை வென்று!
(சரணம் - 2)
எங்கும் பரவும் எழில்மிகு ஒளியில்
ஏனோ அஞ்சும் அவள் குணமன்றோ!
தடுமாறும் இதயத்தை வருடிட இந்த
தலைவன் தேடும் தேவதை வந்தாளோ?
துடிக்கும் மனதைத் திருடிச் செல்ல
வந்தாள் என் மனதை வென்று!
(சரணம் - 3)
காதல் மஞ்சத்தைக் கனிவாய் வெல்ல
காலமே கனிந்து கோலம் இட்டதோ?
வாசம் பரப்பிடும் காற்றே நீ வீசு
வந்தாள் என் காதலி இன்று!
வசந்தமே பூக்களை வாரித் தூவு
வந்தாள் என் காதலி இன்று!
வந்தாள் என் மனதை வென்று!
இரு இதயம் இணைகிறத
இரு இதயம் இணைகிறதே...
பல்லவி:
இரு இதயம் இணைகிறதே - அது
இரகசியமாய் இசைக்கிறதே!
அனைவருக்கும் இது தெரியுமே - மெல்ல
அனைத்துலகும் தெளியுமே!
வித்தை செய்கிறதே - மனதைத்
தத்தை கொய்கிறதே!
(இரு இதயம்...)
சரணம் - 1:
சுவாசக் காற்றில் ஒரு தவிப்பு - இந்தப்
பாசப் பார்வையில் ஒரு விழிப்பு!
எங்கோ ஓரிடத்தில் மனம் சிக்கினால்
அங்கே அன்றி அது நிற்காது!
உள்ளத்தை மெல்லக் கட்டிப் போடவா?
உள்ளத்தில் செல்லக் கட்டில் போடவா?
வித்தை செய்கிறதே - மனதைத்
தத்தை கொய்கிறதே!
சரணம் - 2:
ஒன்றும் அறியாப் பாவையைப் போலே
ஒட்டி அமர்ந்தாய் அருகினிலே!
இன்று யாவையும் வெளிச்சமாக
இதயம் உணரும் உண்மையிது!
உதடுகள் மௌனம் சாதிக்கலாம் - ஆனால்
விழிகள் கதைகள் பேசிடுமே!
உள்ளம் உள்ளே நெகிழ்கிறதே - ஒரு
ஊஞ்சல் ஆடி மகிழ்கிறதே!
சரணம் - 3:
நெருப்பு மூளும் முன்னரே - ஒரு
கருப்புப் புகையே மிதக்கிறதே!
எங்கும் இருக்கும் எழில் கோலம்
பொங்கி வழிந்திடும் புது ஜாலம்!
தீயொன்று நெஞ்சில் மூட்டவே - இரு
தேகமும் சமமாய் ஒளி கூட்டவே!
இங்கிருந்து அங்கும் - அந்த
எல்லை தாண்டி இங்கும்...
(இரு இதயம்...)
Do dhil mil rahe hain chupke chupke என்ற அருமையான ஹிந்தி திரையிசைப் பாடலை ஒட்டி எழுதியது
பாடல் : பாலசாண்டில்யன்
Subscribe to:
Comments (Atom)