Thursday, February 26, 2026
பூங்காத்து
பூங்காத்து - நாட்டுப்புற மெட்டு
பாடல் வரிகள்: டாக்டர் பாலசாண்டில்யன் Balasubramanian Kalyanaraman
பல்லவி:
கூழாங்கல்லு சேராதோ - இந்தக்
கருங்கல்லு கூட்டத்துல?
பொட்டை நிலத்துல - நான்
பட்டுனு வீசும் பூங்காத்து!
உன்னால வெறுங்கையும் - இப்போ
உசிரே ஒட்டும் பூங்கொத்து!
ஒத்தப் பார்வையில - என்ன
ஓரம் கட்டும் பூங்காத்து!
அனுபல்லவி:
கள்ளிக்காட்டு முள்ளுக்குள்ள - ஒரு
கள்ளிப்பூ இப்போ மலந்தாச்சு!
அள்ளி அத நான் சூடிக்க - என்
அறிவும் இப்போ தொலைஞ்சாச்சு!
கல்லு மேல கல்லு வெச்சு
கட்டுன வீடு இது - உன்
சொல்லு மேல சொல்லு வெச்சா
சொர்க்கமா இப்போத் தோணுது!
சரணம்:
ஆள மயக்கும் ஒன் சிரிப்பு
அடிநெஞ்சில் குடி இருக்கு!
நாளப் பாக்கும் காத்துக்கிப்போ
நம்ம வாசம் தெரிஞ்சுருக்கு!
முரட்டுப் பய நானும் - இப்போ
முழுசாத்தான் மாறிப்புட்டேன்!
வரப்பு மேல ஒன் நிழல
வரமாத்தான் ஏத்துக்கிட்டேன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment