Thursday, February 26, 2026
இரு இதயம் இணைகிறத
இரு இதயம் இணைகிறதே...
பல்லவி:
இரு இதயம் இணைகிறதே - அது
இரகசியமாய் இசைக்கிறதே!
அனைவருக்கும் இது தெரியுமே - மெல்ல
அனைத்துலகும் தெளியுமே!
வித்தை செய்கிறதே - மனதைத்
தத்தை கொய்கிறதே!
(இரு இதயம்...)
சரணம் - 1:
சுவாசக் காற்றில் ஒரு தவிப்பு - இந்தப்
பாசப் பார்வையில் ஒரு விழிப்பு!
எங்கோ ஓரிடத்தில் மனம் சிக்கினால்
அங்கே அன்றி அது நிற்காது!
உள்ளத்தை மெல்லக் கட்டிப் போடவா?
உள்ளத்தில் செல்லக் கட்டில் போடவா?
வித்தை செய்கிறதே - மனதைத்
தத்தை கொய்கிறதே!
சரணம் - 2:
ஒன்றும் அறியாப் பாவையைப் போலே
ஒட்டி அமர்ந்தாய் அருகினிலே!
இன்று யாவையும் வெளிச்சமாக
இதயம் உணரும் உண்மையிது!
உதடுகள் மௌனம் சாதிக்கலாம் - ஆனால்
விழிகள் கதைகள் பேசிடுமே!
உள்ளம் உள்ளே நெகிழ்கிறதே - ஒரு
ஊஞ்சல் ஆடி மகிழ்கிறதே!
சரணம் - 3:
நெருப்பு மூளும் முன்னரே - ஒரு
கருப்புப் புகையே மிதக்கிறதே!
எங்கும் இருக்கும் எழில் கோலம்
பொங்கி வழிந்திடும் புது ஜாலம்!
தீயொன்று நெஞ்சில் மூட்டவே - இரு
தேகமும் சமமாய் ஒளி கூட்டவே!
இங்கிருந்து அங்கும் - அந்த
எல்லை தாண்டி இங்கும்...
(இரு இதயம்...)
Do dhil mil rahe hain chupke chupke என்ற அருமையான ஹிந்தி திரையிசைப் பாடலை ஒட்டி எழுதியது
பாடல் : பாலசாண்டில்யன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment