Thursday, February 26, 2026

இரு இதயம் இணைகிறத

இரு இதயம் இணைகிறதே... ​பல்லவி: ​இரு இதயம் இணைகிறதே - அது இரகசியமாய் இசைக்கிறதே! அனைவருக்கும் இது தெரியுமே - மெல்ல அனைத்துலகும் தெளியுமே! வித்தை செய்கிறதே - மனதைத் தத்தை கொய்கிறதே! (இரு இதயம்...) ​சரணம் - 1: ​சுவாசக் காற்றில் ஒரு தவிப்பு - இந்தப் பாசப் பார்வையில் ஒரு விழிப்பு! எங்கோ ஓரிடத்தில் மனம் சிக்கினால் அங்கே அன்றி அது நிற்காது! உள்ளத்தை மெல்லக் கட்டிப் போடவா? உள்ளத்தில் செல்லக் கட்டில் போடவா? வித்தை செய்கிறதே - மனதைத் தத்தை கொய்கிறதே! ​சரணம் - 2: ​ஒன்றும் அறியாப் பாவையைப் போலே ஒட்டி அமர்ந்தாய் அருகினிலே! இன்று யாவையும் வெளிச்சமாக இதயம் உணரும் உண்மையிது! உதடுகள் மௌனம் சாதிக்கலாம் - ஆனால் விழிகள் கதைகள் பேசிடுமே! உள்ளம் உள்ளே நெகிழ்கிறதே - ஒரு ஊஞ்சல் ஆடி மகிழ்கிறதே! ​சரணம் - 3: ​நெருப்பு மூளும் முன்னரே - ஒரு கருப்புப் புகையே மிதக்கிறதே! எங்கும் இருக்கும் எழில் கோலம் பொங்கி வழிந்திடும் புது ஜாலம்! தீயொன்று நெஞ்சில் மூட்டவே - இரு தேகமும் சமமாய் ஒளி கூட்டவே! இங்கிருந்து அங்கும் - அந்த எல்லை தாண்டி இங்கும்... (இரு இதயம்...) Do dhil mil rahe hain chupke chupke என்ற அருமையான ஹிந்தி திரையிசைப் பாடலை ஒட்டி எழுதியது பாடல் : பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment