Thursday, February 26, 2026

வசந்தமே பூக்களைத் தூவ

Baharon mein phool barsao தமிழில்... ஒரு முயற்சி - பாலசாண்டில்யன் வசந்தமே பூக்களைத் தூவு ​(பல்லவி) ​வசந்தமே பூக்களை வாரித் தூவு வந்தாள் என் காதலி இன்று! வந்தாள் என் மனதை வென்று! ​இசை பாடி வா இளந்தென்றல் காற்றே வந்தாள் என் காதலி இன்று! வந்தாள் என் மனதை வென்று! ​(சரணம் - 1) ​ரோஜாவின் இதழ் போன்ற செந்நிற மருதாணி அவள் மென்மைக் கரங்களில் அழகு சேர்க்கட்டும்! ​கார்மேகம் இறங்கி வந்து அவள் கூர்விழி ஓரம் மை தீட்டட்டும்! ​நெற்றியின் உச்சியில் நிலவைச் சூட்டி மெல்ல வந்தாள் என் காதலி இன்று! வந்தாள் என் மனதை வென்று! ​(சரணம் - 2) ​எங்கும் பரவும் எழில்மிகு ஒளியில் ஏனோ அஞ்சும் அவள் குணமன்றோ! ​தடுமாறும் இதயத்தை வருடிட இந்த தலைவன் தேடும் தேவதை வந்தாளோ? ​துடிக்கும் மனதைத் திருடிச் செல்ல வந்தாள் என் மனதை வென்று! ​(சரணம் - 3) ​காதல் மஞ்சத்தைக் கனிவாய் வெல்ல காலமே கனிந்து கோலம் இட்டதோ? ​வாசம் பரப்பிடும் காற்றே நீ வீசு வந்தாள் என் காதலி இன்று! ​வசந்தமே பூக்களை வாரித் தூவு வந்தாள் என் காதலி இன்று! வந்தாள் என் மனதை வென்று!

No comments:

Post a Comment