Thursday, February 26, 2026
வசந்தமே பூக்களைத் தூவ
Baharon mein phool barsao
தமிழில்... ஒரு முயற்சி
- பாலசாண்டில்யன்
வசந்தமே பூக்களைத் தூவு
(பல்லவி)
வசந்தமே பூக்களை வாரித் தூவு
வந்தாள் என் காதலி இன்று!
வந்தாள் என் மனதை வென்று!
இசை பாடி வா இளந்தென்றல் காற்றே
வந்தாள் என் காதலி இன்று!
வந்தாள் என் மனதை வென்று!
(சரணம் - 1)
ரோஜாவின் இதழ் போன்ற செந்நிற மருதாணி
அவள் மென்மைக் கரங்களில் அழகு சேர்க்கட்டும்!
கார்மேகம் இறங்கி வந்து அவள்
கூர்விழி ஓரம் மை தீட்டட்டும்!
நெற்றியின் உச்சியில் நிலவைச் சூட்டி மெல்ல
வந்தாள் என் காதலி இன்று!
வந்தாள் என் மனதை வென்று!
(சரணம் - 2)
எங்கும் பரவும் எழில்மிகு ஒளியில்
ஏனோ அஞ்சும் அவள் குணமன்றோ!
தடுமாறும் இதயத்தை வருடிட இந்த
தலைவன் தேடும் தேவதை வந்தாளோ?
துடிக்கும் மனதைத் திருடிச் செல்ல
வந்தாள் என் மனதை வென்று!
(சரணம் - 3)
காதல் மஞ்சத்தைக் கனிவாய் வெல்ல
காலமே கனிந்து கோலம் இட்டதோ?
வாசம் பரப்பிடும் காற்றே நீ வீசு
வந்தாள் என் காதலி இன்று!
வசந்தமே பூக்களை வாரித் தூவு
வந்தாள் என் காதலி இன்று!
வந்தாள் என் மனதை வென்று!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment