எனது கானம் - இசைக்குட்பட்டது
இது நவராத்திரி ஸ்பெஷல் பாடல்
ராகம் : ஆனந்தபைரவி
தாளம் : திஸ்ர கதி
-பாலசாண்டில்யன்
துர்கையும் நீயே பார்வதியும் நீயே
துக்கங்கள் போக்கிடும் மீனாட்சி நீயே
துரிதமாய் காத்திடும் காமாட்சி நீயே
துஷ்டரை அழித்திடும் திரிசூலி நீயே (துர்கை)
நற்பவியும் நீயே நாராயணி நீயே
நற்கதி தருகின்ற நாகேஸ்வரி நீயே
நல்லவை செய்கின்ற பரமேஸ்வரி நீயே
நானிலம் ஆளுகின்ற மாகாளி நீயே (துர்கை)
சாரதா நீயே சரஸ்வதியும் நீயே
சகலமும் அருள்கின்ற ராஜேஸ்வரி நீயே
சங்கடம் போக்குகிற லலிதாம் பிகையே
சக்தியெனும் மாயே நீ சர்வேஸ்வரி தாயே (துர்கை)
அன்பின் வடிவமே அகிலாண் டேஸ்வரியே
அடைக்கலம் ஆனவர்க்கு அபிராமி நீயே
ஆதார ஸ்ருதி நீயே நாதமும் நீயே
அகில சராசரமும் உனதாட்சி தாயே (துர்கை)
No comments:
Post a Comment