Monday, October 25, 2021

காஞ்சி மகான் பற்றிய பாடல்

காஞ்சி மகான் பற்றிய பாடல் 

எனது கானம் - இசைக்குட்பட்டது
(நாட்டுப்புற மெட்டு - பிரீ சிங்கிங்)
- பாலசாண்டில்யன்

காஞ்சி மகான் பேரைச் சொல்ல 
கவலைகள் தீருமே 
வாஞ்சையுடன் வணங்கி நிற்க 
வாழ்க்கை வசமாகுமே  (காஞ்சி)

வாட்டமுடன் வருபவரின் 
வருத்தங்கள் போகுமே 
நாட்டமுடன் தாள் பணிந்தால் 
நன்மை பல சேருமே  (காஞ்சி)

ஜெய ஜெய ஜெய ஜெய சங்கர 
ஹர ஹர ஹர ஹர சங்கர    (காஞ்சி )

(தனன்ன தானென்ன தானன தானன )

தீராக்கவலை யெல்லாம் உன்னால் 
தீதின்றிப் பறக்குமே 
வாராச் சுகம் கூட நம்மை 
வந்து நலம் சேர்க்குமே 

பாராமுகம் கொள்ளா நின் 
பாதுகையை வணங்கினால் 
பாதகங்கள் பறந்தோடி நற் 
பலன்களும் கூடுமே 

ஜெய ஜெய ஜெய ஜெய சங்கர 
ஹர ஹர ஹர ஹர சங்கர    (காஞ்சி )

கண்களினால் கருணை செய்த 
கண்கண்ட அற்புதமே 
கலியுகம் காத்து நிற்கும் 
காஞ்சியின் மாமுனியே 

அற்புதங்கள் பல செய்து 
அருள்மழை பொழிந்தவரே 
ஆட்கொள்ளும் குருநாதா 
அகிலத்தைக் காத்து நிற்பாய் 

ஜெய ஜெய ஜெய ஜெய சங்கர 
ஹர ஹர ஹர ஹர சங்கர    (காஞ்சி )

(தனன்ன தானென்ன தானன தானன )
(காஞ்சி)

No comments:

Post a Comment