Friday, October 8, 2021

Tamil Ghazal

 எனது கானம் - இசைக்குட்பட்டது

- பாலசாண்டில்யன்
கேயி கேயி மாஜே வாசே
- மராட்டி அபங் மெட்டு
கேவிக் கேவி நான் அழுதேன்
கேட்கலையோ கண்ணா உனக்கு
பாவி யென்னைப் பாராமல்
பாராமுகம் கொண்ட தேனோ ? (கேவி)
தாவி யென்னைச் சேர்த்தணைத்து
தழுவி நிதம் கொள்வாயோ ?
ஆவி பொருள் உடலனைத்தும்
அறியாமல் செய்வாயோ ? (கேவி)
ஆவல் மிகக் கொண்டதாலே
அளவிலாத துயருற்றேன்
காவல் செய்யவே யெனக்கு
கண்ணா நீ வருவாயோ ? (கேவி)

No comments:

Post a Comment