Friday, August 28, 2026
காகிதச் சிறகைக் கட்டிக்கிட்டு
Kagaz ke do pankh leke uda chale jayire
இந்த அருமையான நாட்டுப்புறப் பாடலை தமிழில் தருகிற முயற்சி: பாலசாண்டில்யன்
தத்திப் போகுதே!
காகிதச் சிறகைக் கட்டிக்கிட்டு
காத தூரம் பறக்குதடி!
போகாதேன்னு சொன்ன இடத்துக்கே
போயி நின்னு மயங்குதடி!
வயசு வகுத்த சட்ட திட்டத்தை
மனசு புரிஞ்சுக்க மறுக்குதடி!
ஆசை காட்டும் மாய உலகத்துல
ஓசையின்றி மயக்குதடி!
தூக்கம் பசி கவலையுமில்ல
காதலு தான் முக்கியம்னு
எல்லை தாண்டி பறக்குதடி
என்ன மனசு இது பித்தானதடி!
முன்னும் பின்னும் பாக்காமத் தான்
எல்லையையும் தாண்டிடுதே...
திசையறியா என் பித்து மனம்
தறிக்கெட்டுத்தான் அலையுதடி!
கோட்டையெல்லாம் ஜெயிச்சு வந்து
சுவரையெல்லாம் உடைச்சப் பின்னும்
காதல் என்னவோ திருட்டுன்னு தான்
கணக்குப் போட்டு பயப்படுதே!
அப்படியா இப்படியான்னு
அலசி ரொம்ப யோசிச்சுத் தான்,
நெஞ்சைக் கொஞ்சம் பந்தைப் போல
துள்ளித் துள்ளி உருட்டுதடி!
வெறும் மண்ணையும் சந்தனம்னு
நெத்தியில அது பூசுதடி!
ஆசை காட்டும் மாய உலகத்துல
ஓசையின்றி மயக்குதடி!
முன்னும் பின்னும் பார்க்காமத் தான்
எல்லையையும் தாண்டிடுதே...
திசையறியா என் பித்து மனம்
தறிக்கெட்டுத்தான் அலையுதடி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment