Friday, December 22, 2023

Tamil ghazal

 இன்னும் வாழ எனக்கு ஆசையிருக்காது

நீ மட்டும் என்னோடு இல்லையென்றால்


உன்னைக் காணும் போது

வசந்த காலம் வருவது தெரியும்

இருளிலும் கூட ஒளியாய்த் தெரியும்

நீ மட்டும் என்னோடு இல்லையென்றால்


உந்தன் அருகாமை கிடைக்காதிருந்தால்

கடல் சேரா நதி போல நின்றிருப்பேன்

கடல் சேர்ந்திருந்தாலும் ஓரலை வந்திழுக்குமெனை

நீ மட்டும் என்னோடு இல்லையென்றால்


இதயத்திலிருந்து குரல் எப்படி வந்தது

நம் உறவை விட பிரிவு பெரிதென்பதால் தான்

இன்று என் விழிநீரும் நல் முத்தாகுமா

நீ மட்டும் என்னோடு இல்லையென்றால்


(ஹமே அவுர் ஜீனேகி சாஹத் ந ஹோதி அகர் தும் ந ஹோதே - கேட்ட பின்னர்) 


பிரதிபலிப்பு: பாலசாண்டில்யன்

Tuesday, August 29, 2023

Quick poems

அழகு

என்ற சொல்லை
உன்னோடு பொருத்திய பின்
வேறெங்கும் வேறெதிலும்
அச்சொல்லைப் பொருத்த
இன்னும் அறியவில்லை
அறியும் எண்ணமுமில்லை


உடைந்த இதயத்தோடு
பாதி பேர் சுற்றி வரும் போது
உடைந்ததை ஒட்ட வைக்க
மீதி பேர் சுற்றுகின்றனர்...

குட்பை குட்பை என
குட்டிக்கரணம் போட்டு
பலமுறை சொன்ன பின்னர்
தான் அமைதியின்
முகவரி கிடைக்கிறது


முன் ஜென்மத்தில்
நீ...
இன்றும் இன்னும்
இப்போதும்
நீ...

பொருளே அவள்
அவள் இன்றி
இல்லை பொருள்

Short stories in few words

 வார்த்தை சிறுகதைகள்

- பால சாண்டில்யன்
வந்து பார்ப்பவர்கள் தலை தெறிக்க ஓடுகிறார்கள்

நிலா திரும்பிப் பார்த்தாள், முகத்தில் ஓட்டைகள்

கடலலை திரும்பக் கொணர்ந்த ஒற்றைச் செருப்பு

துடித்து அடங்கிய மீன் குழம்பில் நிச்சலனமாக

நடுங்கும் விரலுடன் அவள் நெற்றியில் குங்குமமிட்டான்.

மெசேஜ் பார்த்தவள் பால் பொங்கியதைப் பார்க்கவில்லை

யாருமில்லா வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ் வண்டி


"நீ எவ்வளவு அன்பு செலுத்துகிறாயோ அவ்வளவு வலிக்கிறது... ஏன்"

"அதை அதிகம் நினைக்க நினைக்க, அது மென்மேலும் காயப்படுத்துகிறது.... "

மனதின் ஆழத்தில், நிச்சயம் உனக்கது தெரியும்...


நீ இன்றி தவிக்கிறேனா அல்லது உன்னுடன் இருந்த என்னை இழந்து தவிக்கிறேனா


தொடர்ந்தது வாழ்க்கை. ஆனால் முன் போல அல்ல...
இழந்தேனா... பெற்றேனா...


பார்க்கலாம் என்று சொன்னது பார்க்காமலே இருப்பதற்கா ?




Saturday, July 22, 2023

மௌனத்தின் ஓசை

 

மௌனத்தின் ஓசை

 

பாலசாண்டில்யன்

 

இமைகளின் நளின நடனத்தில் 

சில வார்த்தைகள் மெல்லப் பிறக்கும்

இதழ்களின் மெல்லிய அசைவுகளில்

மௌனமே அதை மொழி பெயர்க்கும்

 

இமைகளும் இதழ்களும் செய்திடும் 

லீலைகளால் நாவும் சற்று  வரளும்

என்னென்னவோ சொல்லிட நினைத்து

மாலை மாலையாய்  நீர் வடிக்கும்

கீதமும் நாதமும் செய்திட்ட  காவியம் 

படிக்க முடியாமல் ஏனோ துடிக்கும்

 

சொல்ல முயலும் ஒரு சொல்லின் ஓசை 

பலர் சொல்லி முடித்த பொருள் பயக்கும் 

சொல்லைக் கடந்த மௌனப்பேழை 

பல கோடி கோடி பொருள் சுமக்கும் 

இமைகளின் அசைவு முடியும் போது 

எல்லா மொழியும் அங்கு சங்கமிக்கும் 

 

Wednesday, June 28, 2023

Baba song

 https://youtu.be/mO35ieMe-7M


Thank you Sri Bala Sandilyan Anna for the Divine proliferous lyrics 


Lead us from darkness to light. May you be blessed with most and more by the Grace of Baba  🙏

Om  Sairam

Saturday, June 3, 2023

My stories

 https://youtu.be/546HjhgawRk


எனது மூன்று கதைகள் பற்றி பிரமுகர்கள்

Tuesday, April 11, 2023

Aise Kyon - Tamil Version

 அது ஏன்? அது ஏன்?

நான் ஏன் ஏதோ எழுதுகிறேன்
இரவெலாம் எழுதி அழிக்கின்றேன்
ஏன் எனைப் பற்றி இப்படி...
என்னிடமே நான் இத்தனை மறைக்கின்றேன்...
அது ஏன்... அது ஏன்?
இவற்றை நினைத்தல் இதயம் திறத்தல்
எல்லாம் சொல்லுதல்... எல்லோரிடமும் சொல்லுதல்
அவசியமா? ரொம்ப முக்கியமா?
அது ஏன்? அது ஏன்?
அவன் உதடுகளில் எனது பெயர் பிடிக்கின்றது
அவன் ஏன் அதை உச்சரிக்கிறான்?
என் மனதை நச்சரிக்கிறான்?
பல கேள்விகளால் மனம் குங்குமப்பூவென கரைகின்றது
குல்மொஹர் அவிழ்கின்றது என் இரவுக் கனவுகளில்..
இந்தக் கனவுகளில் இருந்து மீள்வது
அவசியமா? ரொம்ப முக்கியமா?
அது ஏன்? அது ஏன்?
அடிக்கடி அவனைப் பார்த்து விட்டால்
அகம் குளிர்கிறது... மனம் சுகிக்கிறது
இதயத்தில் வேறொருவர் இருப்பது
இனமறியா ஒரு பயமே தருகிறது..
நடந்தது ..மனம் முறிந்தது.. அது ஏன்?
இன்னும் என்னை ஆட்டிப் படைக்கிறது
எல்லாம் சொல்லுதல்.. எல்லோரிடமும் சொல்லுதல்
அவசியமா? ரொம்ப முக்கியமா?
அது ஏன்? அது ஏன்?
எல்லாம் சரி... எல்லாம் சரி என்றிருந்தாலும்
ஏன் அவன் எதுவும் சொல்ல மறுக்கிறான்?
அது ஏன்? அது ஏன்?
எல்லாம் சொல்லுதல்... எல்லோரிடமும் சொல்லுதல்
அவசியமா? ரொம்ப முக்கியமா?
அது ஏன்? அது ஏன்?
--------_---------_------------------------
'ஐசே க்யோன்' என்று ரேகா பரத்வாஜ் குழைந்து குழைந்து பாடினால் நான் என்ன செய்வது?
எல்லாம் சொல்லுதல்... எல்லோரிடமும் சொல்லுதல் அவசியமா?
ரொம்ப முக்கியமா?
கேள்வி கேட்டு தோற்றேன்... ஆனால் கவிதை எழுதி வென்றேன்..
ஆம் என்றேன்... பதில் கொண்டேன்..
- மூழ்கிய கவிஞர் பாலசாண்டில்யன்