Thursday, October 23, 2025
வாழுவேன் வாழுவேன் எப்படி...
வாழுவேன் வாழுவேன் எப்படி...
நீ இல்லாமல் நான்...
மனம் ஏற்குமா சொல்
நீ இல்லாத நாள்...
நீயில்லா வாழ்வெப்படி
நிலை சொல்ல முடியாதடி.
சாபத்தை தண்டனையை
வர்ணிக்க சொல்லேதடி...
எனக்கொரு முடிவுண்டு
நீயின்றி நானில்லையென்று...
விஷமென்றாலும் பருகிடுவேன்
வலியென்றாலும் தாங்கிடுவேன்
எந்நிலையிலும் நான் வாழ்ந்திடுவேன்
பிரிவின் வலியிது வேண்டாமடி...
நீயின்றி வாழ முடியாது
நீரின்றி ஒரு நதி கிடையாது...
எனைப் பார்த்த உன் விழிகள்
தரை பார்த்தது
நீ செய்த புன்னகை மனதில்
நீங்காதிருக்குது...
எப்படி மறப்பேன் உன்
பார்வையை புன்னகையை
எப்படி மறப்பேன் அந்த
இரவின் சந்திப்பை...
வாழுவேன் வாழுவேன்
எப்படி
நீ இல்லாமல் நான்
மனம் ஏற்குமா சொல்
நீ இல்லாத நாள்...
Impeccable impact created by "Jiye toh jiye kaise haye bin aapke"
- பாலசாண்டில்யன்
Subscribe to:
Comments (Atom)