Tuesday, November 17, 2015

Parenting 2

சிறப்புக் குழந்தைளை செவ்வனே பராமரிப்பது  எப்படி ?
டாக்டர் பாலசாண்டில்யன்
மனநல ஆலோசகர்   M - 9840027810

சிறப்புக் குழந்தைகள் என்று சொல்லக் கூடிய மன நலம் குன்றிய குழந்தைகள் பிறப்பதன் காரணம் என்ன ? அப்படிப் பிறந்தால் அவர்களை பேணிக் காப்பது எப்படி எனும் கவலை நிறைய பெற்றோருக்கு உண்டு.

பல சமயங்களில் பிரசவத்தின் போதே பிரச்சனை தொடங்கி விடுகிறது. கரு உருவாகும் போதே உள்ள சிக்கல் மற்றும் RH இரத்த வகை ஒவ்வாமை போன்ற காரணங்கள் பலருக்குப் புரிவதில்லை.

தேவை அற்ற மருந்து எடுத்துக் கொள்ளல், கருத்தடை செய்யும் முயற்சியில் சிக்கல், மற்றும் தாய் (சதவீதம் மிகக் குறைவு என்றாலும்) மது அருந்துதல், குழந்தை பிறக்கும் போது போதிய ஆக்சிஜென் இல்லாது போவது, கக்குவான் இருமல், அம்மை போட்டுதல், மூளை காய்ச்சல் வருவதால், உணவில் விஷம் கலந்து விட்டால் - அம்மா அல்லது குழந்தையின், அயோடின் குறைபாடு, ஊட்ட சத்து குறைபாடு மேலும் இன்னும் சில பல விளங்காத அறிவுக்குப் புலப்படாத காரணங்கள் பல - என்று மன நலம் குன்றிய குழந்தைகள் பிறப்பிற்கு காரணங்கள் எனச் சொல்லலாம்.

மன நலம் குன்றிய குழந்தைகள் நிலை என்பது ஒரு வாழ்நாள் பிரச்சனை எனபதை முதலில் பெற்றோர் மற்றோர் புரிந்து கொள்ளல் அவசியம். பொதுவாக பிறப்பின் போதோ பிறந்த பிறகோ ஏற்படுவது என்றாலும் இந்த நிலையைக் கண்டறிவது பெரும்பாலும் சில வருடங்களுக்கு பிறகே என்பது தான் இன்றைய சூழலில் உண்மை. மிதமான மூளை அல்லது அறிவு வளர்ச்சி இருக்கும் இந்தக் குழந்தைகளை சில தெரபி வழியாக, சிறப்பு பள்ளி மூலமாக ஓரளவுக்கு தான் சரி செய்யலாம்.

பெற்றோர்க்கு இடையே யாரால் இந்த நிலை என்ற வாக்கு வாதம் சண்டை நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது பல இல்லங்களில். ஒருவருக்கொருவர் குற்றம் சாற்றிக் கொள்வதும் இயல்பு தான் என்றாலும் அடுத்த குழந்தை எப்படி பிறக்கும் என்ற கவலை தான் மிகப் பெரியது. மேலும் இந்தக் குழந்தையை யார் எப்படி கவனிப்பது என்பதிலும் சச்சரவு நிலவுகிறது. குடும்ப உறுப்பினர்கள் இந்தக் குழந்தைகளை ஏற்காத போது ஏற்படும் மன வருத்தம் கொடுமை. அதில் இருந்து மீண்டு வருவது தான் பெற்றோருக்கு மிகப் பெரிய சவால். முதல் அல்லது அடுத்த குழந்தை இந்தக் குழந்தை மீது பரிவு காட்டாத சுயநலச்  சிக்கலும் உண்டு...!!

இங்கே தான் ஆரம்பிக்கிறது பெற்றோரின் சரியான முடிவு, மனப்பாங்கு, உறுதியான நிலை. இது நம் குழந்தை. இது தான் அதன் நிலை. இப்போது என்ன செய்யலாம் என்று தீர்க்கமான காலத்தின் அருமை கருதி எடுக்கும் சில செயல்பாடுகள் அந்தக் குழந்தையின் வாழ்க்கை நிலையைச் சற்று மாற்றி அமைக்கும்.

இந்தக் குழந்தைகளை சிறப்புக் குழந்தைகள் என்று சொல்லுவது உண்டு. ஏன் எனில் இவர்கள் தமது கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள் என்பதால். எத்தனையோ சிறப்புக் குழந்தைகள் கைத்திறன் சில கற்றுக் கொள்கிறார்கள், பாடுகிறார்கள், கைவினைப் பொருட்கள்
தயாரிக்கிறார்கள். சில சிறப்பு பயிற்சிகள் வழங்கும் மையங்களை கண்டுபிடுத்து அவர்களுக்கு பின்னாளில் ஓரளவு சுயமாய் வாழும் நிலை ஏற்படுத்துதல் பெற்றோரின் கடமை.

மிகவும் பின் தங்கிய ஊர்களில் இந்தக் குழந்தைகளை பராமரித்து பயிற்சி தரும் அமைப்புகள் இருப்பதில்லை எனும் போது பெற்றோர் மிகவும் சிரமப் படுகிறார்கள். நகரத்தில் இதற்கான நல்ல பயிற்சி மையங்கள் உள்ளன. அங்கே பிரத்யேகமான பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் நிறைய இருக்கின்றனர்.

இந்தக் குழந்தைகள் அதிகம் எடை போட்டு விடாமல் இருக்கவும்,  நகம் பல் இவை குறித்த கண்காணிப்பும் அவசியம் ஆகிறது. மேலும் பெண் குழந்தைகள் என்றால் பருவ வயது சிக்கல்களை பார்த்துப் பார்த்து உதவ வேண்டிய நிர்பந்தமும் இருக்கிறது.

என்ன இருந்தாலும் இவர்கள் கடைசி வரை பெற்றோருக்கு ஒரு பாரமாகத்தான் இருக்கிறார்கள். இருக்கும் வரை அவர்களை பரிவுடன், கனிவுடன், பொறுமையுடன் காத்து கவனித்து வளர்த்தல் ஒரு போராட்டம் என்றாலும் சில பெற்றோர்கள் அந்த காரியத்தை செவ்வனே செய்கிறார்கள்.

சிலர் இந்த மாதிரி குழந்தைகள் பிறந்தவுடன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு கண் காணாத அநாதை இல்லங்களில் விட்டு விடுகின்றனர். அங்கே அவர்கள் நிலை நிச்சயம் மோசம் தான். என்ன இருந்தாலும் பெற்றவர் பார்த்துக் கொள்வதற்கும் மற்றவர் பார்த்துக் கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு தானே. அப்படிப்பட்ட பெற்றோர் கடைசி வரை குற்ற உணர்வோடு தான் வாழ்கிறார்கள். 

உலகில் தோன்றி விட்ட இந்தக் குழந்தைகளுக்கும் உயிர் பிரியும் வரை வாழும் உரிமை உள்ளது என்பதை உணர்ந்து கண்ணும் கருத்துமாக அவர்களை கடைசி வரை பாதுகாத்து கரை தேற்றுவது கடமை என்பதை உணர்தல் நல்லது. 

மனநலம் குன்றிய (MR) சிறப்புக் குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் தாண்டி மன நல ஆலோசகர்கள், சிறப்பு பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், திறன் பயிற்சியாளர்கள், நரம்பியல் நிபுணர்கள், மன நல மருத்துவர்கள், தன்னல ஆர்வலர்கள் இவர்களின் பங்கு மகத்தான ஒன்று என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட்டு அவர்களை

மனதார பாராட்ட வேண்டும். இவர்கள் அனைவரும் சேர்ந்து தான் இந்தக் குழந்தைகளை இவ்வுலகின் பிரஜைகள் கணக்கில் சேர்த்திட உதவுகின்றனர். ஆகவே பெற்றோர்கள், தாம் மட்டுமே போராடுவதாக நினைத்தல் அவசியம் இல்லை. 

Parenting 1

-- இமைகள் போல் இருவர் (டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பு)
-டாக்டர் பாலசாண்டில்யன் மனநல ஆலோசகர்       email: balasandilyan@yahoo.com      M - 9840027810

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலைஅதிலும் பதின் பருவக் குழந்தைகள் எப்போதும்பெற்றோருக்குத் தருவது மன அழுத்தம் தான்

நாளுக்கு நாள் பெற்றோர் பிள்ளைகள் மத்தியில் விரிசல் அதிகமாகிக் கொண்டே வருகிறதுமாறி வரும்உணவுஉடைஊடகங்கள்நாகரீகம் மற்றும் கலாச்சாரம் ஒட்டு மொத்த சமூகத்திற்கே ஒரு சவால் தான்.கூடவே குடும்பத்தில் பெருகி வரும் வசதிகள்கல்வி எதிர்பார்ப்புகள்போட்டி மனப்பாங்குதொழில் நுட்பமாற்றங்கள்சுற்றி நடக்கும் சம்பவங்கள் இவை அனைத்தும் பிள்ளை வளர்ப்பை தீர்மானிக்கின்றன.

என்ன என்ன சிக்கல்கள் பிள்ளைகள் தருவதாக பெற்றோர்கள் இன்று உணர்கிறார்கள் ? 1. இளமையில்காதல்தாமதமாக உறங்குதல்எழுதல்ஒவ்வாத உடை மற்றும் முடி அலங்காரங்கள் 2. ஊர் சுற்றி விட்டுதாமதமாக வீடு வருவதுகண்டதை தின்று விட்டு வீட்டு உணவு வேண்டாம் என்பது 3. மூத்தவர்களைஅவமதிப்பதுமோசமான படப் பாடல்கள் பார்ப்பது அல்லது கேட்பதுஅடிக்கடி பார்ட்டி அல்லது திரைப்படம்பார்க்க கூட்டமாக செல்வதுஎப்போதும் அலைபேசிடிவிஇன்டர்நெட் என இருப்பது. 4. குண்டாகி விடுவது,பொடுகுபரு வரவழைத்துக் கொள்வதுஅவை பற்றிப் பேசினால்கருத்து சொன்னால் கோபப்படுவது, 5.படிப்பில் கவனம் செலுத்தாமல் மதிப்பெண் சிக்கலில் தவிப்பது 6. பிரார்த்தனை மற்றும் வீட்டு சடங்குகளில்கலந்து கொள்வதில் வாதம் மற்றும் பிடிவாதம் 7. உறவினர்கள்நண்பர்கள் வீட்டு நிகழ்சிகளை சாக்குபோக்குசொல்லி தவிர்ப்பது 8. அடிக்கடி பணம் கேட்பதுபணத்தின் மதிப்பு பற்றி சற்றும் புரிந்து கொள்ளாதிருத்தல்,நண்பர்கள் போல இருக்க முயல்வதுஅவர்களை வீட்டிற்கு கூட்டி வருவது 9. வீட்டை ஒரு விருந்தினர்இல்லமாக பாவிப்பதுஎந்த உதவியோ ஒத்துழைப்போ வழங்காமல் இருப்பது 10. எல்லாவற்றையும் தேடிக்கொண்டே இருப்பதுகழிவறைகளில் அதிக நேரம்கண்ணாடி முன் அதிக நேரம்பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பது என்று இந்தப் பட்டியல் நீளுகிறது.
இவர்களை எப்படி சமாளிக்கலாம் ?. 1. பெற்றோர் தான் சிறந்த முன் உதாரணம் என்பதால் நாம் வீட்டிலும்வெளியிலும் எப்படி நடந்து கொள்கிறோம் என்று முழுமையாக உணர்தல் அவசியம். 2. இனம் புரியாதகோபம்கெட்ட சகவாசம்கெட்ட பழக்கம்தனிமை விரும்புவது இவற்றை உற்று நோக்கி கவனித்துஅவர்களைப் புரிந்து கொள்ள முயற்சித்தலின் அவசியம். 3. நண்பரைப் போல் அடிக்கடி பேசி நேரம் செலவுசெய்து புரிந்து கொள்ளுதல்தொண தொணக்காதிருத்தல்அவர்கள் நட்பை மதித்தல் மிக முக்கியம். 4.எளிதில் பேசி விடும் பெண் பிள்ளைகளை விட யோசித்து அல்லது கடிந்து பேசும் ஆண் பிள்ளைகள் சற்றுகடினமானவர்கள் என்பதை மனதில் கொள்ளல் 5. மாறிக் கொண்டு இருக்கும் வானிலை போல இவர்கள்மனநிலையும் மாறும்அப்போது விவாதம் செய்யும் சூழல் வீட்டில் ஏற்படும்அத்தருணம் பொறுமைகடைபிடிக்கும் பெற்றோர் வெற்றி பெறுகிறார்கள்

 பெற்றோர்கள் தவிர்க்க வேண்டியது என்ன ?
1. யார் நடத்தையையும் சட்டென்று மாற்ற முடியாதுசிறு வயது முதலே இருக்கும் மனப்பாங்கை தும்பைவிட்டு வாலைப் பிடிப்பது போல தீடிர் என மாற்ற முயற்சிப்பது இயலாத ஒன்று. 2. அடிக்கடி கத்துவது,கோபப்படுவதுதிட்டுவதுமிரட்டுவதுசொந்த விஷயத்தில் தலையிடுவது நல்லதல்லஅன்பிற்கும்உண்டோ அடைக்கும் தாழ்கனி இருப்பக் காய் கவர்ந்தற்று - இவை நினைவில் இருக்கட்டும்.
3. இலக்குகள் நிர்ணயம் செய்வதில் கண்டு கொள்ளாதிருத்தல் தவறு.
4. அவர்களுக்கு இணையாக இக்கால பாடல்கள்நடிகர்கள் பற்றிய தகவல் அறிவு அவசியமில்லை எனநினைப்பதுமொபைல்முகநூல்புதிய சமையல் குறிப்புகள் பற்றி சற்றும் விருப்பம் காட்டாதிருத்தல் தவறு. 5. அவர்கள் 'அவர்கள்தான். 'நாம்அல்ல என்பதை உணர்ந்து கொள்ள முயற்சிக்காமை 

நமது குழந்தைகள் தவறு செய்ய மாட்டார்கள் என நம்புதல் நன்மை தரும்அவர்கள் இடத்தில நம்மைவைத்துப் பார்த்தல் நிச்சயம் நல்லதுஅவர்களைப் சந்தேகப்படாதிருத்தல்பொறுப்புகளை பகிர்ந்து அளித்துகாத்திருத்தல்வீட்டு முடிவுகளில் அவர்களை ஆலோசித்தல்அவர்களின் நவீன சிந்தனைகளைபாராட்டுதல், குறிப்பாக அவர்களின் நண்பர்களை மதித்தல் பல நேரங்களில் நல்ல உறவுமுறையைஏற்படுத்தும்

 இன்றைய பெற்றோர்கள் பழைய பஞ்சாங்கமாக இருத்தல்,  எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்தல்,தமது கனவுகளை குழந்தைகளின் மீது திணித்தல்இதர பிள்ளைகளோடு ஒப்பிட்டு அவமானப்படுத்தல்,ஒழுக்கம் என்ற பெயரில் மிலிடரி போல நடந்து கொள்ளுதல்வளர்ந்து விட்டார்கள் என்பதை மறந்து கைநீட்டுதல்உறவினரிடம் மற்றும் நண்பர்களிடம் குற்றப் பத்திரிகை வாசித்தல்எல்லாவற்றிற்கும் கேள்விகேட்டல்அவர்கள் முன்பு சண்டை போட்டுக் கொள்ளுதல், - இவை அனைத்தும் மாற்றிக் கொண்டு தான் ஆகவேண்டும்.

இது இரு கோடிட்ட வரிகள் என்று நினைத்துப் படிக்கவும்நம் குழந்தைகளுக்கு பிடித்த நண்பர்கள்,உடைகள்உணவு வகைகள்நடிகர்கள்நடிகைகள்டிவி சானல்கள்அவர்கள் கேட்கும் பாடல்கள்,பொழுதுபோக்குஅவர்கள் படிக்க நினைக்கும் படிப்புசெல்ல நினைக்கும் இடங்கள்புதிய திறமைகள்,கனவுகள் பற்றி எல்லாம் கேலி செய்யாது இருத்தல் இன்றைய பெற்றோரின் தலையாய செயல்பாடுஎனலாம்.