Wednesday, March 30, 2016

Enhancing skills of the working population is vital and significant

Enhancing skills of the working population is 
vital and significant
Dr. K. Balasubramanian, Thought Leader/Transformation Coach, www.visionunlimited.in

Work force development has traditionally been found in two forms: place-based strategies that attempt to address the needs of people living in a particular neighbourhood, or sector-based strategies that focus on matching workers' skills to needs in an industry already present in the region.
Skill building can be viewed as a mechanism to improve the effectiveness and contribution of labour to the overall production.  It is as an important component to push the production possibility cutting edge outward and to take growth rate of the economy to a higher path.  Skill building could also be seen as an instrument to empower the individual and improve his/her social acceptance or value.
A vibrant manufacturing, especially, Small and Medium Enterprises sector can play a key role in creating jobs and high economic growth.  It has the potential to provide employment for the remarkably large labour force that is still working in agriculture.  Achieving and sustaining such growth and higher employment will require a boost in industrial and services growth, spurred by SMEs.
Today, many high-income countries are restructuring their human resource development strategies. In the face of increasingly aggressive international competition, these countries are setting up lifelong learning systems as an essential national policy for maintaining their global competitive advantage.
Skills based education is tarnished by multiple access barriers like limited infrastructure facilities, quality of training, rigid entry requirements, lack of financial support, and negative perceptions. These limitations exist more for the disadvantaged, especially women and rural communities. Developing our human resources reservoir that not only feeds to the domestic market but also the global workforce and labour crisis is the urgent growth imperative. Indian workforce needs to be trained across the four levels, from White Collar to the Rust Collar workers linking them to job opportunities and market certainties.
The skills challenge doubles up for us with a bulge young working age group population. Often referred to as the ‘Demographic Dividend’, the skills v/s jobs requirement divergence often leads to economically inactive working age group people. While this impacts the economy and the particularly the growth of the domestic industry, it is a huge social and civil risk. Examples of growing unrest, for example the red belt or the increasing revolution are a wakeup call.
It is further more challenging to bridge the huge skills demand – supply gaps. Sadly, careers springing from skills are a matter of chance for majority and not a well thought choice. Other challenges in implementation like shortage of trained trainers and teachers, mismatch in the curriculum and industry expectation and a lack of global recognition of certification as such.
The recent ‘Make in India’ scheme surely calls for a significant contribution from the SME sector. Nevertheless the SME sector organizations in India have a huge shortage of skilled manpower. At the same time the organizations also have not taken any steps to upgrade the skills of their human sources and the efforts from their side are not good enough.
The Indian work force lack in technology front, communication and digital communication. A study reveals that in the northern part of the country only 42% of the organizations focus on enhancement of skill of their workforce. The study also states that 20% of the workmen are unskilled and 21% of the workforce got themselves trained after taking up a job.
It is worrying to note from the study that 61% of the organizations state that the skill development and enhancement in a structured manner and a specific plan for the same is never complete and possible due to non-cooperation from the employees which are the road blocks to productivity and profitability.
The study also reveals stunning information that 41% of the financial services organizations, 39% of the trading organizations make use of the latest communication technology and telecommunication facilities. 85% of such organizations could reduce their working capital expenses significantly and 80% of the organizations stated that they could save a lot of time which has resulted in efficiency, effectiveness and productivity.

If Indian companies have to compete globally, skill development, continuous improvement among the workforce is inevitable or else the SMEs would perish automatically despite many plans on the paper at the Government level.

Tamil Quotes by Balasandilyan

வருத்தங்களை மணலில் எழுது ...ஏன் நீரில் கூட எழுது ...!
பெற்ற அருளாசிகளை பாறையில் செதுக்கு ...!!
மகிழ்ச்சி தானாய் மனதில் தங்கும் !

இடது புறம் வலது புறம் இருபுறமும் இறக்கை இருந்தாலும் இரண்டுமே வேறு அல்ல - அவை என்னுடையது என்பதை 
எப்படி மறப்பேன் மறுப்பேன்?!

சிலர் வீடு வாசலை சிலர் மனசாட்சியை அடமானம் வைத்து வியாபாரம் செய்கிறார்கள்

குழந்தை அழுதால் - சின்னக் குழந்தை என்றால் வுட்வேர்ட்ஸ் ... பெரிய குழந்தை என்றால் குட்வேர்ட்ஸ் ...!!

(ம)ரணத்தை விடக் கொடுமையானது மன்னிக்கும் தன்மை. ஆனாலும் மன்னித்தால் தான் மனஅமைதி. ரணமல்ல.. நம் குணமே பெரிது.

அடக்கம் தான் செய்யப் பட வேண்டுமா?
அடக்கமாக நம்மால் இருக்க முடியாதா ?

அன்புக்கு ஏங்குகிறோம் 
அன்பை விலை கொடுத்தும் வாங்குகிறோம் 
அன்பாய் ஏன் நம்மால் இருக்க முடியவில்லை?

உண்மையைச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் மனசு பாரமாகத்தான் இருக்கும். அது தான் பாழும் மன இயல்பு.

முன்பு பாத்திரம் பண்டம் பயன்படுத்தினார்கள். நேற்று லேப்டாப், மொபைல் பயன்படுத்தினார்கள். இன்று மனிதர்களை பகடைக் காயாய் பயன்படுத்துகிறார்கள்.

துரோகிகள் வெல்வது போல் இருக்கலாம். துரோகம் ஒரு ரோகம் என்றும் வெல்வதில்லை. துரோகிகள் முகம் புன்னகை தருவதில்லை.

சொல்லித் தெரிவதில்லை 
(ஏ)மாற்றிப் பேசும் கலை

மரணமெனும் சதாரணத்திற்கு நிவாரணம் வழங்கி ஆற்றுப்படுத்த முடியாது. உயிரின் உண்மை மதிப்பு உணர்வதற்கு அன்பே வழி

முதலில் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு பின்னர் நீங்கள் செயலில் இறங்க வேண்டும் என்று பொதுவாகக் கூறப்படுவது தவறு. பயத்துடன் இருக்கும் போது நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இருந்து தான் துணிச்சல் பிறக்கிறது.



Top little stories by Balasandilyan

2 நிமிடக் கதை: 
காற்றுக்குப் பெயர் வைத்தார். மழைக்குப் பெயர் வைத்தார். பள்ளி கல்லூரி மாணவருக்குத் தெய்வம் ஆனார். எளிய அரசு ஊழியர் 36 ஆண்டுகள் பணி. வானமே இவரது எல்லையும் தொல்லையும். பணியில் அர்ப்பணித்து வேலை பார்த்ததால் வருணனும் வாயுவும் இவருக்கு நீங்கா அருள் புரிந்து வந்தனர். வீட்டு வரவேற்பறையில் இவரது அதிகாலை அறிவிப்புகள் பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. காற்றும் மழையும் ஓய்வு பெறுமா இனி எனும் கேள்வி மனதில் எழும்ப இவர் கிளம்புகிறார் விடைபெற்று. எளிமை தான் இவர் பலம். இவர் இருப்பது மாம்பலம். ஒரு மருத்துவ மனையில் சமூக சேவை செய்யப் புறப்படுகிறது இந்தத் தென்றல் என்று ஒரு மனநிலை அறிக்கை தெரிவிக்கிறது.

2 நிமிடக்கதை :
அவன் தெரிந்தோ தெரியாமலோ ஒன்று சொல்ல நினைத்து அதை சொல்ல மறந்து தன் நோக்கத்தில் முழுகி தன் பயணத்தைத் தொடர்ந்தான். அந்தப் போட்டியில் பல படிகள் ஏறி சில படிகள் சறுக்கி கடைசியாக சிகரத்தை தொட்டு நின்றான் வெற்றியாளனாக. 
மறுநாளே அவன் மகிழ்ச்சி தவிடு பொடியானது. களிப்பும் சுளிப்பும் விடாமல் தொடர்கிறது எனும் போது செய்வதறியா சிறு பிள்ளை ஆனான். ஒரு வெற்றியாளன் பெற்ற வெற்றியை கொண்டாடக் கூட முடியவில்லை என்பது யார் செய்த பாவமோ... சுற்றி இருப்பவர்களும் தலை சுற்றித் தான் போனார்களோ...! மூடி மறைக்கவே தனி நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். பரிசாகப் பெற்ற புது வீட்டில் விளக்குத் திரி ஏற்றாமல் விளக்கம் அளித்து திரிகிறான் அந்தோ..!!

இரு நிமிடக் கதை:
மிகத் திறமை வாய்ந்த ஒரு காட்டுக் கட்டெறும்பை வேற்று ஊரின் ராஜா பார்த்து வியந்து போனான். தன்னோடு கூட்டிப் போனான். அதனை பிற சிற்றெரும்பு, செவ்வெறும்பு, பிள்ளையார் எறும்பு இவற்றுடன் மோதி ஜெயிக்கச் சொல்லி ஊக்குவித்தான். காட்டுக் கட்டெறும்பு தலைவன் ஆனது. தன்னோடு மேலும் 14 வித சிறு ஜந்துக்களை சேர்த்துக் கொண்டது. எதிரில் யானை வந்தாலும் காதில் புகுந்து சாகடிக்கும் திறமை பெற்றது அந்தக் காட்டுக் கட்டெறும்பு. இடையில் பல சின்னச் சண்டைகள், மகா மற்றும் மெகா யுத்தங்கள் என்று எது வந்தாலும் காட்டுக் கட்டெறும்பு தான் ஏறும்பரசன் ஆனான்.
பல சமயம் எல்லோரும் வியக்கும் வண்ணம் காட்டுக் கட்டெறும்பு செய்த சாகசங்கள் பிறரால் செய்ய முடியா ஒன்றாக இருந்தது. அந்த 14 பேரில் ஒன்று மலர்களை மொய்க்கும் பொன் வண்டு. மக்கள் பார்வை சற்று மாறத் தொடங்கியது. ஊரின் ராஜா மட்டுமின்றி கூட இருப்பவரும் எப்படியாவது இந்த காட்டுக் கட்டெறும்பை கழட்டி விட வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்து பொன்வண்டை போற்றித் துதி பாடினர்.
ஆனால் காட்டுக் கட்டெறும்பு பொன்வண்டோடு நட்பு வைத்துக் கொண்டு மேலும் வியப்பில் ஆழ்த்த ஆரம்பித்தது. அப்படியும் காட்டுக் கட்டெறும்பை காலி பண்ண எண்ணி நீ வேலையை விட்டுப் போ என்றனர் ராஜாவும் அவர் கூஜாக்களும். ஒரு இறுதிப் போர் அதனில் தனது திறமையைக் காட்ட எண்ணிய காட்டுக் கட்டெறும்பு, தைரியமாக அவர்களைப் பார்த்து "போங்கடா வென்று" என்று சொல்லி விட்டு தான் யார் என்று காட்டியது இறுதிப் போரில் வென்று....
அந்தப் போர் வெற்றிக் கொண்டாட்டத்தில் உரக்கச் சொன்னது, நீ என்ன என்னைப் போகச் சொல்வது, நானே போகிறேன், முடிந்தால் என்னைப் போல் ஒருவனைக் கண்டுபிடி என்று....!! This is about Dhoni as you guessed right.


40 விநாடிக் கதை :
பெருத்தான், இளைத்தான். நடித்தான். இயக்குனர் சொன்னதெல்லாம் கேட்டான். படம் முடிய இரண்டு வருடம் ஆனது. இடையில் வந்த வாய்ப்புகள் எல்லாம் இழந்தான். படம் வந்தது. படங்களுக்கு விருது பட்டியலும் வந்தது. இவன் பெயர் நிச்சயம் இருக்கும் என்று எல்லோரும் சொன்னார்கள். ஏன் இவன் பெயர் இல்லை என்ற விசாரணை இவன் மனதிற்குள். சற்று உடம்பு தேறியவன் மீண்டும் இளைத்தான்...அடுத்த படத்திற்காக அல்ல.


30 வினாடிக் கதை :
ஷரத் பிடித்த விஷயத்தில் இறங்கி பிரபலமானான். பிரபலமான அவனை மகிழ்விக்க ஒருத்தி வந்தாள். அடிக்கடி அவளுடன் தென்பட்டான். அதனால் மெனக்கெட்ட விஷயங்களில் மனங்கெட்டான். ஏனோ வந்தவள் திடீரென விலகினாள். தன் இலக்கிலிருந்து விலகியவன் மீண்டும் வெற்றி மேல் வெற்றி பெற நேச நாயகன் ஷரத் தேச நாயகன் ஆனான்.


அக்பர் சபையில் தான்சேன் அடிக்கடி பாடி அரசரை மகிழ்வித்தார். அந்தப் பாடல்களில் மயங்கிப் போவார் அரசர்.
ஒரு நாள் அரசர் தான்சேன் அவர்களை அழைத்து சொன்னார், " நீங்களே இப்படி அருமையாகப் பாடுகிறீர்கள் என்றால் உங்கள் குரு எவ்வளவு அற்புதமாகப் பாடுவார், நான் அவர் பாடுவதைக் கேட்க ஆவலாக உள்ளேன்" என்றார்.
தான்சேன் சொன்னார், "அரசே, எனது குரு வெளியில் வருவதில்லை. ஒரு பர்னாசரமத்தில் இருக்கிறார். அவர் பாடுவதை யாரும் கேட்க முடியாது"

இருவரும் மாறு வேடம் அணிந்து அந்த இடத்திற்கு சென்று குருவின் பாட்டைக் கேட்கும் முடிவெடுத்து அங்கு சென்றனர். அன்று பௌர்ணமி தினம், குரு மிக அருமையாகப் பாடிக் கொண்டு இருந்தார். அரசரும் தான்சேனும் மறைந்து இருந்து இசையை ரசித்து விட்டு அரண்மனை திரும்பினர்.
அடுத்த நாள் அரசர் தான்சேனிடம் நேற்று நான் கேட்ட பாடலை மீண்டும் கேட்க வேண்டும் போல உள்ளது. எங்கே பாடுங்கள் என்றார். மறுப்பு சொல்லாமல் பாடிக் காட்டினார் தான்சேன்.
அரசர் சொன்னார், " நீங்கள் நன்றாகத் தான் பாடுகிறீர்கள், இருப்பினும் உங்கள் குரு பாடியது போல் இல்லை"
தான்சேன் பதிலுக்குச் சொன்னார், "நான் அரசருக்குப் பாடினேன். எனது குருவோ இறைவனுக்குப் பாடினார். அது தான் வித்தியாசம்."
- இலக்கியப்பீடம் சிறுகதை பரிசளிப்பு விழாவில் எழுத்தாளர் சிவசங்கரி பேசக் கேட்டு மகிழ்ந்தவர் டாக்டர் பாலசாண்டில்யன்

Tuesday, March 29, 2016

Different attitude in searching for a job

Different attitude in searching for a job
Dr. Balasubramanian, Thought Leader/Transformation Coach
www.visionunlimited.in    Mobile – 9840027810

We are living in some of the toughest economic times many of us have encountered, and each of us is challenged with how we will respond. Populist say, "Your living is determined not so much by what life brings to you as by the attitude you bring to life; not so much by what happens to you as by the way your mind looks at what happens." One of the keys to living your calling-that is, doing the things God is calling you to do with your life-is learning that you are in control of your attitude.

Therefore, one of the most important steps you can take toward achieving your greatest potential in life is to learn to monitor your attitude and its impact on your work performance, relationships and everyone around you.

People just decide their job or occupation just based on the market situation and the job opportunities available around them. Similarly people who would like to change their jobs also decide only on the basis of market conditions.

Searching of a suitable job in the recent days depends on the individual’s age and the right decision is taken just based on their age and agility.

The other criteria of choosing a job or profession do not just depend on the emoluments but the suitability of the job with their life style. Majority of the young population decide their jobs these days merely on their life style situations.

Teenagers and young adults - the so-called Generation Y - have watched with horror as their parents worked punishing hours in their scramble for money and status. Now, as this group go in search of jobs, they have different priorities. They care less about salaries, and more about flexible working, time to travel and a better work-life balance. And employers have to meet their demands. They are ready to resign if their jobs were not fulfilling and fun, with decent holidays and the opportunity to take long stretches off for charity work or travel. Salary and status were not high on the priority list

Aforesaid criteria, in fact, changes from country to country and the attitude of employees are completely different.

In China, people choose only popular and renowned organizations. North Americans of late, do not show interest to work in manufacturing facilities.

People in China and North America use social media more to identify their jobs compared to other developed countries.

Most skilled people across the globe select their profession want to avoid stringent selection and recruitment procedures in any organization and rather choose one that would suit to their life style and attitude. The fact that young people change jobs more frequently meant they are less willing to put up with long hours or poor holidays. 

Accordingly the organizations also have started to introduce modern recruitment methods, employee related policies and pay structure across the globe. This is the big change in attitude one can find among the employee as well as the employers.

In Canada, working-age people with disabilities are historically under-represented in the workforce — only 56 per cent of them have jobs compared with 74 per cent of people without any physical or intellectual challenges. As for the paid employment rate of people with developmental disabilities (intellectual challenges) nationally, only 16 per cent have jobs.

The top priority when choosing a job was 'doing work that I love'. 'Earning lots of money' was far behind, in seventh place. When it came to walking away from an employer, a lack of motivation was the top reason followed by a work-life balance leaning too far towards the job.

Finally, we see young people that are searching for some sort of meaning in life and if you can't align their values with the organisation they might leave.

A famous quote says: “We who lived in concentration camps can remember the men who walked through the huts comforting others, giving away their last piece of bread. They may have been few in number, but they offer sufficient proof that everything can be taken from a man but one thing: the last of the human freedoms—to choose one’s attitude in any given set of circumstances, to choose one’s own way.”


Life ultimately means taking the responsibility to find the right answer to its problems and to fulfil the tasks which it constantly sets for each individual.

Monday, March 21, 2016

மொழியா திறமையா எது பிரதானம் ?

மொழியா திறமையா எது பிரதானம் ?
- டாக்டர் பாலசாண்டில்யன் 

பாடல் ஆசிரியர் தமிழர் தான் அதனால் அது தமிழ் பாட்டு. இருப்பினும் வெகு ஆண்டுகளாக பாடி நம்மை மகிழ்வித்து வருவது யார் யார் ? பாலமுரளி எஸ் பி பி, டி எம் எஸ், ஏ எம் ராஜா, பி பி ஸ்ரீநிவாஸ், யேசுதாஸ், ஜானகி, மனோ, உன்னிமேனன், உன்னிக்ருஷ்ணன், ஜெயச்சந்திரன், ஸ்வர்ணலதா, சித்ரா, சுஜாதா,  இவர்கள் தவிர ஹரிஹரன், ஸ்ரீநிவாஸ் போன்ற பாலக்காட்டுத் தமிழர்கள் கூட நம்மை நல்ல பாடல்கள் மூலம் மகிழ்வித்து உள்ளார்கள். இவர்கள் யாருமே தமிழர்கள் அல்லர். 


அது மட்டுமா? சாதனா சர்கம், அல்கா யாக்னிக், லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, சோனு நிகம், கைலாஷ் கேர், அபிஜித் முகர்ஜி, அனுராதா படுவல் போன்ற மேலும் பல வட நாட்டவர் நமது தமிழ் மொழிப் படங்களில் பாடி நம்மை சந்தோஷப் படுத்தி உள்ளனர். 

தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டு பாடியவர்கள் எம் எஸ் அம்மா, எம் எல் வீ அம்மா, பாகவதர், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், டி ஆர் மகாலிங்கம், சிதம்பரம் ஜெயராமன், பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ, போன்ற வெகு சிலரே.

நமக்கு மொழி வேறு சங்கீதம் வேறு என்ற எண்ணம் இருப்பதால்  வரும் பிரச்சனை தான் இது. யார் பாடினாலும் அவர்கள் பாடியது தமிழ் மொழியில் தான் என்று ஏன் நாம் பார்க்கக் கூடாது. 

அது தவிர இப்போதைய பாட்டுப் போட்டிகளில் தமிழர்கள் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது என்றால் போட்டி நடக்கும் முன்பே வேற்று மொழிக் காரர்களை போட்டியில் சேர்க்காமல் இருந்து விட்டால் இந்த பிரச்சனை போட்டி நிறைவு பெற்று பரிசு தரும் நாள் அன்று நெஞ்சை நெருடாது. அதை விட்டு விட்டு ஆஹா உங்கள் மொழி வேறு என்றாலும் என்னமாக பாடுகிறீர்கள் என்று போட்டி நடக்கும் தினங்களில் பாராட்டு கொடுப்பதும், அதே போட்டியாளர்கள் வெற்றி பெறும் தினம் பெரும் அமளி துமளி ஆகிறது சமூக வலைத்தளங்கள். ஏன் இந்த இரட்டை மனநிலை நமக்கு?

இசை, நடனம், நாடகம் இந்த மூன்று வடிவங்களுக்கு நாம் மனிதரைப் பாராது அவர்கள் தரும் ஆன்ம லயம் தனை பார்க்க வேண்டும். 

எமி ஜாக்சன் நடித்தால் ஏற்கிறோம், அமிதாப் பச்சனை பிரபுவின் பெரியப்பாவாக பார்க்கிறோம். ஆனால் வேற்று மொழிக் காரர் நமது மொழியில் பாடி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெறக் கூடாது. இது என்ன ஞாயம். 

வடநாட்டு எம் பி ஒருவர் திருவள்ளுவத்தை பரப்பினால் மகிழ்கிறோம். நமது தமிழ் நாட்டு மனிதர் ஒருவர் சிங்கப்பூர் அதிபர் என்றாலும், அமெரிக்காவில் நீதிபதி என்றாலும், வெளி நாட்டு நிறுவனத்திற்கு தலைவர் என்றால் அவர்கள் அந்த நாட்டில் அதனை எப்படிப் பார்ப்பர், நினைத்துப் பார்க்கிறோமா ?

சென்னை சூப்பர் கிங்ஸில் அஷ்வின் தவிர யார் சென்னைக் காரர் இந்த எட்டு ஆண்டுகளில்? தோனி நமது ஊர்க் காரர் என்று ஏற்றுக் கொண்டு அவரைக் கொண்டாடுகிறோம். அது மட்டும் சரியா?

பக்கத்தில் உள்ள துபாய் போனால் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு எது பேசினாலும் அவர்களை மதராசி அல்லது சவுத் இந்தியன் என்கிறார்கள். அவர்கள் அங்கு ஒன்றாக இருக்கிறது கண்ணில் நிச்சயம் பட்டிருக்கும். ஒரு வேற்று நாட்டவரோடு பழகும் போது நாம் வடநாட்டு மனிதரோடு இணைந்து இந்தியர் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்வோம்.

பிராந்தியத்தில் மட்டும் பக்கத்து ஊர்க் காரர் நம் ஊருக்கு வரக்கூடாது. நமது ஊரில் இன்று பாலம் மற்றும் வீடு கட்டுபவர்கள் யாரும் தமிழர் இல்லை. உணவு பரிமாறும் ஹோட்டல்களில் அதிகம் தமிழர் இல்லை. ஹோசூர் போன்ற ஊர்களில் பல நிறுவனங்களில் பணி புரிபவர்கள் எல்லாம் பல மாநிலத்தவர். கல்விக் கூடங்களில் படிக்கும் மாணவர்கள் நாட்டின் பிற மாநிலத்தவர் தான். 

ஏன் இந்த பேதம். சில நேரம் உங்கள் உயிரைக் காப்பவர் கூட வேற்று மொழி பேசும் ஒரு டாக்டர் ஆக இருக்கலாம். பெரும்பாலும் நர்ஸ்கள் எல்லோருமே மலையாளம் பேசுபவர்கள் தானே.

நாம் எல்லாம் ஓரினம். உழைப்பவர் நம் பெயர் என்று பார்த்தால் ஒன்று புரியும் இனம் பார்க்க வேண்டாம் நல்ல மனம் பார்ப்போம் என்று. சங்கீதத்திற்கும் இது நிச்சயம் பொருந்தும். ஒரு ஸ்பூர்த்தி, பரத், நிகில், பார்வதி, சியாத், அரவிந்த் இவர்களையும் நமது வீட்டுப் பிள்ளைகளாக ஏன் பார்க்கக் கூடாது ? பாடும் போது அப்படித் தான் பார்த்தோம். வெற்றி பெறும் போது தான் நமக்கு கோபம் வருகிறது. மனம் சற்று விரியட்டும். இசையை, கலையை, நடனத்தை, நடிப்பை ரசிப்போம். அவர்கள் ரிஷி மூலம், நதி மூலம் பார்க்க வேண்டாம். நமது தேசத் தந்தை ஒரு தமிழர் இல்லை. நமக்கு அருஞ்சேவை ஆற்றிய அன்னை தெரசா இந்தியரே இல்லை நினைவில் கொள்வோம். 

அதே சமயம் ஒரு அப்துல் கலாம் உலகையே வியக்க வைத்த ஒரு தமிழர், உங்கள் இல்லங்களில் திறமைசாலிகளை உருவாக்குங்கள். இல்லையேல் திறமை எங்கிருந்து வந்தாலும் அவர்களை உமதாக்குங்கள். மாறுவோம்.மாற்றுவோம். 

Articles in Dinamalar March 2016



Sunday, March 20, 2016

Quotes of Bala in Tamil

சின்னப் பிரச்சினை கூட உங்களை கவலையில் அழுத்தினால் பெரிய வாய்ப்புகளை உஙகளால் சமாளிக்க முடியாது.

வாய் இல்லை என்றால் உரைக்க முடியுமா 
இது மனிதன் 
வாய் இல்லை என்றால் குரைக்க முடியுமா 
இது  .....!

காயப்படுத்தும் / காயப்படும் போது தான் வார்த்தையின் அர்த்தத்திற்கு வலிமை புரிகிறது.

அடைய முடியா இலக்குகள் 
அடக்க முடியா ஆசைகள் - இரண்டுமே 
அவஸ்தை தான் சந்தேகம் என்ன

"நீங்கள் உழைக்கத் தெரிந்தவர்" என்று பெயர் வாங்கினால் உங்கள் வெற்றி நீடிக்கும்...நிலைக்கும்.
"நீங்கள் பிழைக்கத் தெரிந்தவர்" என்று அழைக்கப்பட்டால் உங்கள் வெற்றி கேள்விக்கு உரியது மட்டுமல்ல...கேலிக்குரியது...!!

செழிப்பு ஒரு மயக்கநிலை. வெற்றிக்களிப்பில் பணம் ஒரு உபபொருள். இருப்பினும் வளர்ச்சியை விட வழியேதும் உண்டா?

அனுபவம் மனிதனின் பொறுப்பு. அனுகிரகம் கடவுளின் சிறப்பு

வயதாவது நம் தவறல்ல. தவறிக்கூட அது பற்றி நினைப்பது தான்.

நிறங்களை இனஙகளை பார்ப்பது தவிர்த்துத் திறன்களை மனங்களை பார்க்கக் கற்போம். வாழ்க்கை இனிதான் இனிதாகும்

உனக்குள் இருக்கும் திறமைகளை வைத்து உலகை சாய்க்க வேண்டுமா... உன்னையே மாய்க்க வேண்டுமா? தெரிந்து வாழ்வதும் வாழ்வைக் கொண்டாடுவதும் அவசியம்

இந்த வழி மூடப்பட்டுள்ளது என்ற சாலை அறிவிப்பு நம் பாதையை மாற்றலாம், போய்ச் சேர நினைக்கும் இடத்தை மாற்றாது.

சின்னத்தணல் வெப்பம் தராது. கனலாய் எரி வெற்றி தவறாது. - 

பெற்றதை இழந்து நீ வெறுத்தாயே - பொறு
மற்றதைப் பெற்று நீ சிறப்பாயே 

விழுந்தால் 
ரோஜா இதழைப் போல் விழு 
உனக்கும் சத்தம் கேட்காமல் 
ஊருக்கும் துக்கம் வராமல்...!! 
வீழ்ந்த பின் எழு 
எழுஞாயிரைப் போல்
உன்னுள் உற்சாகமாய்
உலகோர்க்கு ஒளிவிளக்காய்.. 


ஒன்றினை இழந்தாலும் மற்றதாய் நான் வருவேனே 
கன்றினைக் காக்கும் பசு பெற்ற தாய் நான் தருவேனே 


ஆன்மாவிலிருந்து பணியாற்றும் பொழுது 
ஆனந்தநதி உனக்குள் பாயும் தொழுது..!!


அடையாளங்களை இழப்போம். 
அனுதினம் புதிதாய் பிறப்போம் 
அன்புநிலையில் லயிப்பொம் 
ஆனந்தமயமதை சுகிப்போம் 


ஊக்கம் எனும் மருந்து விருதுகள் பெற்றுத்தரும். ஊக்கமருந்து பெற்ற விருதுகளை பிடுங்கி விடும்

மாண்டு விடப் பிறந்தோமில்லை. இன்னல் எது வரினும் மீண்டெழப் பிறந்தவர் நாம். இன்னுமா பரிதவிப்பு?

ஒளியிலிருந்து நிழலைப் பிரித்துப் பார்த்தது யாரு? ஒளியும் நிழலும் ஒன்றென இனி பாரு.. 

உன் அறிவை விற்று 
உலக ஆச்சரியங்களை வாங்கு


விலகியிருக்கும் போது தான் 
விழையும் வினா உனை அறிந்தேன் 
விரும்பியிருக்கும் போது தான் 
விடையே நீயெனப் புரிந்தேன் 


உனக்குள் கரைந்து என்னைத் தொலைக்கவா 
எனக்குள் உறைந்து உன்னை அழைக்கவா 
ஒளியில் விட்டில் போல் உன்னுள் கலக்கவா 
ஒளியே நீயென உணர்ந்து மலைக்கவா 

உனக்குள்ளிருக்கும் தணலைக் காற்றூதி நெருப்பாக்கும் என்னைப் புரிந்து நீ ஒளிர்வாய் 

விதிகளை மட்டுமே பின்பற்றினால் சில நேரம் வாழ்வின் எழில்மிகு விளையாட்டுகளை கைப்பற்றத் தவறி விடுவோம்

பணக்காரர் என்றாலும் மூச்சு இழுத்து விடுவது காற்றைத்தான்...காசை அல்ல..!!

கோடுகளின் மீதும் நிறங்களின் மீதும் நாட்டம் இருந்தால் ஓவியர் ஆகலாம். மொழியின் மீதும் சமூகத்தின் மீதும் நாட்டம் இருந்தால் பேச்சாளர் அல்லது எழுத்தாளர் ஆகலாம். வேறு என்ன பிடிக்கும் உங்களுக்கு?!

திரும்பிப் பார்ப்பவர் எல்லாம்
விரும்பிப் பார்ப்பவர் அல்ல..

வெற்றி என்பது எந்தக் கதவு வழியாகவும் வரலாம். ஏற்றுக் கொள்வதும் எதிர்த்து நிற்பதும் அவரவர் மனநிலை.

பலவீனம் நம்மை பலமாக அழுத்துகிறது

கோபம் வந்தால் தண்ணீர் அருந்து. கவலை என்றால் நாமமே மருந்து

மகிழ்ச்சியாக இருக்கும் போது பாட்டு கேட்கிறோம். சோகமாக இருக்கும் போது பாடல் வரிகள் கேட்கிறோம்

நேற்று ஊசின சோறு 
இன்று நகரும் ஆறு 
நாளை நிலையில் தேர்...!

வலியும் இன்பமும் நிறைந்த பாதையா
சரியும் தவறும் நிறைந்த பாதையா
எது உனது ?

ஒழுக்கம்
எல்லாவற்றுக்கும் ஓர் இடம்
அனைத்தும் அதனதன் இடத்தில்
எல்லாவற்றுக்கும் ஒரு நேரம்
அனைத்தும் அதனதன் நேரத்தில்










Wednesday, March 9, 2016

Election awareness slogans

தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் : by Dr. Balasandilyan
தேர்தல் நாள் விடுமுறை அல்ல
தேசம் மாறும் நம்மால் மெல்ல
தெளிவு வேண்டும் நேர்மை வெல்ல 
ஆள்பவர் யாரென நம் விரல்கள் சொல்ல
கூட்டு முயற்சியே நாட்டு வளர்ச்சி
ஓட்டு அளித்திடு காட்டு உன் முதிர்ச்சி
யார் நமை ஆள்வது உன் விரல் அழுத்து
நேர்மையை நாடு விலகிடும் அழுக்கு
தேர்தல் என்பது மாற்றம்
மாற்றம் எனில் முன்னேற்றம்
குறையட்டும் உனது சீற்றம்
நிறையட்டும் வாழ்வில் ஏற்றம்
தேர்தல் என்றால் புது தெளிவு
தெளிவில் பறக்கும் தலைகுனிவு
ஒட்டு போட வாருங்கள் உங்கள் வாக்கு தாருங்கள்
ஓட்டில் மாற்றம் பாருங்கள் உண்மை பெருமை சேருங்கள்
நமது தேசம் நமது கையில்
நமது சக்தி நம் விரல் மையில்
சாக்கு போக்கு சொல்லாதே
வாக்கு அளித்திட தவறாதே
யார்க்கும் நீ அஞ்சாதே
எதற்கும் நீ கெஞ்சாதே
நேர்மை ஞாயம் மனதில் வை
தேர்தல் நாளில் முடிவு செய்
உரிமையை கடமையை விட்டுத் தரலாமா
உறங்கி இருந்து பின் வாழ்வில் அழலாமா
வாக்கு தவறுவதும் வாக்களிக்க தவறுவதும்
வாழ்வில் மாற்றம் தருமா ?
ஏழையாக இருந்தால் கூட ஏற்றம் வரும் - வாக்களிக்காத
கோழையாக இருந்தால் மாற்றம் வருமா ?
படித்தவரா படிக்காதவரா முக்கியம் அல்ல
வாக்களித்தவரா சாக்கு சொன்னவரா அதுவே முக்கியம் !
செல் ...வாக்களி ...உரிமை காட்டு !
சொல் ...நேர்மையாய் ஓட்டு போட்டு !
நமது தேசம் நமது வாழ்வு
ஓட்டளிக்காதது நமக்கே தாழ்வு !
ஒரு நாள் கடமை மறந்தால்
ஐந்து வருடம் புன்னகை பறக்கும் ...!
ஒரு நாள் தெளிவு பிறந்தால்
ஐந்து வருடம் நன்மை பிறக்கும் !
ஒரு நாள் அச்சம் ....ஐந்து வருடம்
வருத்தம் மிச்சம் ...!
உடனே ஓடு உன் பெயர் தேடு !
ஓட்டு போடு நாட்டுப் பற்றோடு !

Why I call Dhoni ( MS) as a great leader?

Why I call Dhoni ( MS) as a great leader?
Dr. Balasandilyan (Thought Leader/Transformation Coach)
www.visionunlimited.in Mobile 9840027810
Dhoni, first of all, is a youth icon, cool in pressure situations, a self-made man and well-organized – which everyone is aware.
Look at the time he came into captain the team INDIA, when people were very unhappy disappointed with the team then, fans were angry, there were protests against Team India and change was the demand.
Dhoni possessed the typical and ideal characteristics of an excellent leader viz. Dominance, High energy, Integrity, Intelligence and Stability.  To top it all, he was fresh in his ideas as he had never captained any domestic side even before. He always was setting challenging objectives for himself and enjoyed working with people. His unique approach in contrary to the prior captains and leaders of the Indian Side, he was listening to others, working with the team and the management, he encouraged participation, wanting to give opportunity to youngsters ( remember Joginder Sharma who bowled the last over of World Championship match final match – final over against Pakistan), and finally he respected each and every member in the team.
He won World T20 2007, Test Team of the year 2010-2011, ODI World Cup 2011, India whitewash Australia in a test series and now in 2016 a clean white wash in the T20 against Australia in Australia. He also won IPL – Chennai Super Kings twice and winner of Champions League T20 in 2011.
There are lots of lessons to learn from him according to me – isolate yourself at critical times, calmness and patience to be cultivated to tackle any tough situation, provide opportunity to the Non-Stars to showcase their talent on the big stage, live the moment, being a coach himself to young people and having self-belief, take guidance from anyone even if the person has no title or position.
Especially, now can anyone imagine the pressures that he is undergoing – his favorite team CSK is not there in the current IPL and he has to work with a new team PUNE and the new management, next is he was issued with an arrest warrant for an advertisement which was later withdrawn, the current Director Ravi Shastri playing politics to bring in another leader in place of MS. When he lost 4 ODIs in Australia all the senior cricketers, commentators and sports journalists started to dump him down. People like Gavaskar and Srikanth who have done very less to this country went to the extent of telling that MS must quit Cricket itself, and he has already quit Test matches after having brought the nation to the No 1 position. Some of the journalists are severely criticizing him in their article very religiously.
No one never rather even dreamt that MS would bounce back in Australia in 5th ODI and clean sweep in T20 as 3-0. And now he has done the country proud by winning the Asia Cup yet again – March 2016 – also ready to bring back the World ICC T20 cup 2016.
Again the shameless people have started to appreciate and hail MS for his commendable leadership. People want to show pink slip like IT companies for non-performance. The irony is MS never dwelled upon his past glory and still wanting to fight, not showing any agony in his face or action but only the right attitude of aligning with the team objectives and playing only for victory and for the team. That is the USP of MS. He never pushes himself forward when the team does well, he never hesitates to own responsibility when the team fails. There can be only one DHONI. He is a special character like the Haryana Hurricane – the great Kapil Dev sir. MS is a rare breed born in 1981, July 7th and started from playing football. He still has some excellent cricket left in him and he would perhaps win the World Cup title yet again in the upcoming series. I appreciate the upcoming star Virat Kohli – who is getting to take up the mantle from MS but not before MS calls it a day by himself. It would be unfair to push or force him out of the game when he is serving the country so well and still willing to serve.

My due Salutes to the Rajiv Gandhi Khel Ratna and Padma Shri – MS Dhoni for the good work. Let the country enjoy the good cricket from him for at least for this year and he will surely show way to the next leader on his own and he is very much aware that no one is a permanent in any position. I wish the great man all success. Let the upcoming young leaders learn all the positive characters from him. MS Jai Ho. 

சிவ தாண்டவ தோத்திரம்

சிவ தாண்டவ தோத்திரம் (மொழி பெயர்ப்பு - டாக்டர் பாலசாண்டில்யன்)
மங்கலம் பொலிந்திடும் ஆனந்த நர்த்தனனே
திங்களை அணிந்த தில்லை யம்பலனே
கங்கையைச் சடையில் தாங்கினாய் அதனால்
தங்கிய நஞ்சும் பரிசுத்த மானதுவோ
ஸ்ருங்காரமாய் அரவு மாலை யணிந்தவனே
எங்குமே இன்பம் அருளிடச் செய்குவாய் !
வற்றாத அமரநதி சுழன்று சுழன்றே
சுற்றிச் சொரிகின்ற சடைமுடி இறைவனே
தொற்றி நிற்குமொரு பிறைநில வதன்கீழ்
நெற்றிப் பட்டியில் ஜொலிக்கும் அக்னியனே
முற்றுமு ணர்ந்த ஞானியே பரமனே
குற்றமிலா தொருநிலை அருளிடச் செய்குவாய் !
வண்ண நிலவின் வடிவழகால் ஒளியால் இமாலயன்
புண்ணிய புத்ரியின் அழகும் கூடியநிலை
கண்ணால் எந்நாளும் கண்டு தரிசித்தால்
எண்ணம் ஈடேறும் மமதை தானொ ழிந்து
தன்னை யறிந்தாளும் தன்மை தானுயரும்
வன்மை வழங்கி அருளிடச் செய்குவாய் !
ஓதும் மறைநான்கின் மேன்மை உரைக்கவல்
மேதினியைக் காக்கும் தான்நினது சடையைக்
கோதும் நாகமதின் சோதிமிகு ஒளியால்
மோதும் திசையெட்டின் பெண்டிர்முகம் சிவக்கும்
பூபதியுன் மேலாடை மதயானை சருமம் ;
வேதமுதல்வனே தீதின்றி அருளிடச் செய்குவாய் !
நொடிப் பொழுது நின்விழிமலர் தரிசனம் போதுமென
அடித் தொழுது வணங்கும் இந்திராதி தேவர்பாதமலர்
வெடித்துச் சிதிறிய மகரந்தம் நின் பொற்பாதம்
பிடித்துத் தொழுதிட செய்பாவம் தானகலும்
மடியும் பல்லுயிர் சூழ்ந்திலங்கும் பாரினில்
தோடுடைய செவியனே அருளிடச் செய்குவாய் !
நாட்டமுடன் நாளும் வணங்கிடும் தேவர்
கூட்டத்தின் அதிபதியே தகிக்குமுன் நெற்றிப்
பொட்டின் அக்னியின் மதனை எரித்தவனே
வாட்டம் மிகப்போக்கி நெஞ்சின் சஞ்சலமெனும்
கேட்டைத் தவிர்த் தன்பர்க் கேற்றம் புரிந்துநல்
வீட்டைப் பெறும்வண்ணம் அருளிடச் செய்குவாய் !
வீணே உழன்றுழன்று வேதனைகொள் மனதைப்
பேணி நன்னெறியில் ஏற்றமொடு நல்கிட
ஆணும் பெண்ணும் இரண்டுமே நானென்று
ஆணிவேர் தத்துவத்தை அழகுற எடுத்துரைத்து
நானிலத்தை காக்கும் ஆதிசிவனே அய்யனே
வானுறை உமையவனே அருளிடச் செய்குவாய் !
எந்தையே நின்கழுத்துக் கருமைகார் மேகங்கள்
சிந்திடும் அமாவாசை யிருட்டோ என்றென்
சிந்தை கிறுக்கும் செயல்புரிய மறக்கும்
சந்திரனின் ஒளிதாங்கிய தலையோனே சிவனே
முந்தைய தீவினைகள் பொறுத்தே எவர்க்கும்
வந் தபயம் வழங்கி அருளிடச் செய்குவாய் !
முப்புர மெரித்தவனே நீலகண்டனே தக்ஷனின்
தப்பெனும் வேள்வியைக் கலைத்தவனே அரனே
அப்பனே அந்தகாசுரனை வதைத்தவனே என்றும்
ஒப்புயர்விலா உத்தமனே நமனை நசித்தவனே
உப்பிலியே கொடிய கஜாசுரர்க்கு சிம்ம
சொப்பனமானவனே தூயவனே அருளிடச் செய்குவாய் !
துறவுமா மன்னனே துக்கம் கடந்தவனே
அரவு பூண்டவனே அம்புலி அணிந்தவனே
உறவு அபிமானமில்லா உன்னத மானவனே
பரமனே திகம்பரனே பரதத்தின் நாயகனே
மறவாது புகழ்பாட மயங்கிடும் மறையவனே
பிறவாத வரந்தனை அருளிடச் செய்குவாய் !
வேலவன் தந்தையே குளிர்மலை நாதனே
சூலனைகாலனை காலால் உதைத்தவனே மறையே
சூலம் தரித்தவனே சுந்தரனே இறைவனே
ஞாலம் ஆளுகின்ற நர்த்தன நாயகனே
நாளும் ஆடுகின்ற உடுக்கை உடையவனே
நீலகண்டப் பெருமாளே அருளிடச் செய்குவாய் !
வார்த்தைக் கெட்டாத வொரு மாதவமே அருள்மிகு
நேர்த்தியினும் மேலான வாசகமே பிரார்த்தனைகள்
பூர்த்திசெய் புண்ணியரூபனே பாறையை பஞ்சை
கீர்த்திமிகு ரத்தினத்தை கருங்கல்லை சிநேகிதனை
பார்த்திகழும் பாதகனை ஆண்டியை அரசனை
நேர்சமமாய் பாவிக்க அருளிடச் செய்குவாய் !
வாசமிகு மலர்மார்பா அங்கமெலாம் வெண்ணீற்றைப்
பூசுகின்ற ஈசனெனும் அய்யனே கங்காதரனே
ஆசுகவி அடியவர்க்கு முதல்வோனே நற்கருணை
வீசுகின்ற சுகக்காற்றே மறைபொருள் ஆனவனே
பேசுகின்ற வாய்நிதமும் நமச்சிவாய மெனஜெபித்து
தாசனென மாறிவிட அருளிடச் செய்குவாய் !
அரிதெலாம் உனக்கெளிது அனைத்துமே உன்சித்தம்
பாராளும் பரமனே இப்புனித தோத்திரத்தை
யாரெலாம் துதிப்பரோ அவர்குலம் தழைக்கும்
ஏராளமாய் நின்னருள் அவர்க்கு கிடைக்கும்
வேரோடு மருந்தென துக்கம் முறிக்குமென
ஈரேழு உலகிற்கும் அருளிடச் செய்குவாய் ..!

recent compositions

உன்ன நம்பி ஒலகத்துய எதுத்தேன்
முதமுத முடிவு ஒன்னு எடுத்தேன்
என்னயே உங்கிட்ட கொடுத்தேன்
என்ன செஞ்சே பாட்டு கூட படிச்சேன் (உன்ன)
பிரிஞ்சிக்க நெனைக்காதே புரிஞ்சிக்க
வலைத்தளமும் தேடலும் போல இருக்க
சேர்ந்தே பிறந்தவங்க நாம் ஒன்னுசேர
அர்த்தமான சொல்லே சொல்லின் அர்த்தமே (உன்ன)
காச்சலுக்கு மாத்திரை நீ தானே
கூச்சலுக்கு யென்துணை நீ தானே
பேச்செலாம் உம்பெயர் வேறென்ன
பேருக்குத் தானே என்பேரு நானென்ன (உன்ன)
முடிவுதான் நீயின்னா முதல்ல யென்
முகத்தில படலியே மனசுல வரலியே
முதல்ல பாத்தது யாருன்னு தெரியல
முகமும் முகவரியும் இப்போ நீதான் (உன்ன)
- டாக்டர் பாலசாண்டில்யன்
-------------------
மெய்யாலுமே சொல்றேன் 
உன்னோட நெனப்பாவே கிரேன்னு சொல்றது 
பொய் தான்...
அப்போப்போ என்னப் பத்தி கூட 
நெனைக்கிறேன் ...நீ இல்லாம 
நான் எப்படி வாழறதுன்னு ...!
-----------------------------------------------------
A new composition....in the Y Gen way...
வாழ்க்கைப் ப்ளேட்டின் ஒரு புறம் நீ மறுபுறம் நான்
ஸ்பூனாய் போர்க்காய் ! இணைவோம் மூன்று வேளையும் ஒன்றாய் ..!!
சூடான சூப் போல உந்தன் பார்வை
ஸ்டார்ட்டர் போல உந்தன் சிரிப்பு
மெயின்கோர்ஸ் போல உந்தன் முத்தம்
டெச்செர்ட்ஸ் போல வருவாய் நித்தம் நித்தம் (வாழ்க்கை)
எத்தனை மெனுவில் லிஸ்ட் இருந்தாலும்
என்றும் நிறைவது உன் முகம் தானே
பார்த்தால் போதும் பசியடங்கும்
புன்னகைத்தால் மனம் சக்தி பெறும் (வாழ்க்கை)
உணவாய் உறவாய் உணர்வாய் நீயிருக்க
எத்தனை பில் வந்தாலும் நான் பே பண்ணுவேன்
கனவாய் முகிலாய் கலைந்தால் நீயும்
காற்றை உணவாக்கி பீல் பண்ணுவேன் (வாழ்க்கை)
- டாக்டர் பாலசாண்டில்யன்

One line stories - Balasandilyan

ஒரு வரிக் கதைகள் :
டாக்டர் பாலசாண்டில்யன் 
1. வேட்டி சேலை ஐநூறு பணம் வாங்க கூட்டம். இயன்ற மட்டும் கையை நீட்டிய போது அரை அடி குறைஞ்சுது. இடுப்புக் குழந்தையை போட்டு ஏறி வாங்கினாள்.
2. டிரைவர் மாரிக்கு மார்வலி. கத்த முடியல. வண்டியை நிறுத்தவும் முடியல. எல்லோருக்கும் டிக்கெட் கொடுத்த கோவிந்தன் மாரிக்கு கொடுக்கல. ஆனாலும் போயிட்டான்.
3. வண்டி நிறைய வெங்காயம். விக்கலை செந்திலுக்கு. அவன் கத்தினது சரியில்லை. கொஞ்சம் தக்காளி சேத்த பிறகு கத்தாமல் வித்துப் போனது.
4. ரொம்ப பசி. வீட்டில் எங்கு தேடியும் ஒன்றும் கெடைக்கலை. டிவி வைத்தான் சுந்தர். சமைத்துப் பார் நிகிழ்ச்சி. பார்த்துக் கொண்டே தூங்கிப் போனான்.
5. செமி பைனல் நிகழ்வில் அன்று டெடிகேஷன் ரவுண்டு. அம்மா பற்றி பாடினான். அவனுக்கு மட்டுமே தெரியும் அவள் ஐ சி யு வில் இருப்பது. சுருதி விலகவில்லை. ஜட்ஜ் சொன்னார் சுருதி மாதா.
6. மொட்டை மண்டையுடன் ஆபிசில் சுரேஷ். யாருக்கு என்ன எல்லோரும் கேட்டனர். இன்றோடு முடிகிறது என் அடிமை வாழ்வு என்றான் புது முதலாளி.
7. வழி முழுக்க பலரிடம் சண்டை போட்டார் நான் வந்த ஆட்டோக் காரர். சாப்பிட்டீங்களா எனக் கேட்டேன். புன்னகை முகத்தில் கோபம் குறைந்தது.
8. வீட்டில் விசேஷம். தேய்த்து முடியவில்லை முருகம்மாவிற்கு அந்தப் பாத்திரங்களை. கிளம்பும் போது பழையது கொடுத்தார்கள் ஒரு பாத்திரத்தில்.
9. மூணு வேளையும் டீ குடித்தே வயிறு நிரப்பும் ராமு சொன்னான், நல்ல வேளை சக்கரை சரியா இருக்கா என்று அப்பப்போ ருசி பார்க்கிறேன் இந்த வேலையில். இதற்கு முன்பு முடி வெட்டுற வேலை.
10. பத்து வருசமா கூடை நிறைய பூ விக்கும் சரஸ்வதி ஒரு நாள் கூட தலையில பூ வெச்சதில்லை. பூ வித்த காசைக் குடிச்சே போய் சேந்தான் அவள் கணவன்.
11. வீலுக்கு காத்து பிடிச்சு நாளைக்கு நூறு ரூபாய் சில்லறை வாங்கிற பாண்டி முதலாளிக்கு ஐம்பது கொடுத்தான் சம்பளமாய்.


ஒரு வரிக் கதை : 
1.புறப்பட்டது பஸ். பயணிகள் யாரும் இல்லை. உற்று நோக்கினேன். ஓட்டுனரும் இல்லை.
2. ஒரே சத்தம். மேடையில் ஒரு சிலர் அழுதவாறு. எங்கு பார்த்தாலும் பூக்கள். திருமணத்தில் இருவர் மாட்டிக் கொண்டனர்.

3. உணமையச் சொல். மிரட்டும் சத்தம். யார் அந்த வடையை தின்றது? அது எலி பிடிக்க விசம் தடவி வைத்திருந்தேன்...!
4. இடம் தேடி குறுக்கும் நெடுக்கும் அலைந்தது அம்பியை போல. பிரசவ வேதனையில் பூனை.
5. இரவு வரை அவன் தான் காத்தான். இரவுக்குப் பிறகு இவன் தான் காத்தான். காலையில் காணோம். கடவுள் சிலை ஒன்றும் காவல் காப்பவனும்.
6. ஒரே சீவு. வெட்டிச் சாய்த்தான் . முப்பது என்றான். வேறு வழியின்றி கொடுத்தான் இளநீரை வாங்கிக் கொண்டு.
7.பெரிய உருளையை சரி பாதியாக வெட்டினான். ஐம்பது கிராம் கல்லுக்கு பதில் தராசில் வைத்து அளந்து போட்டான் மிளகாய்.
8.வா வா என்று வரவேற்றார் தலைவர். சீட்டு தானே வா உள்ளே. உள்ளே போனவன் சொன்னான் உறுப்பினர் அட்டை இந்தா பிடி என்று.
9.மிகவும் பிடித்த கேசரி செய்து 'அவன்' முன்பு வைத்து பிரார்த்தனை செய்தாள். கண் திறந்த போது கேசரி இல்லை. அன்றோடு நிறுத்தினாள் நைவேத்யைம்.
- பாலசாண்டில்யன்

Some recent writing of mine

அடையாளங்களை இழப்போம். 
அனுதினம் புதிதாய் பிறப்போம் 
அன்புநிலையில் லயிப்பொம் 
ஆனந்தமயமதை சுகிப்போம் 
This is 'Rumi'tic.

ஊக்கம் எனும் மருந்து விருதுகள் பெற்றுத்தரும். ஊக்கமருந்து பெற்ற விருதுகளை பிடுங்கி விடும்

மாண்டு விடப் பிறந்தோமில்லை. இன்னல் எது வரினும் மீண்டெழப் பிறந்தவர் நாம். இன்னுமா பரிதவிப்பு?! Resilience is a must.

This is 'Rumi'tic :
Who has seen a shadow separated from the light? 
ஒளியிலிருந்து நிழலைப் பிரித்துப் பார்த்தது யாரு? ஒளியும் நிழலும் ஒன்றென இனி பாரு.. 
- பாலசாண்டில்யன் 

This Is 'Rumi'tic :
உன் அறிவை விற்று 
உலக ஆச்சரியங்களை வாங்கு

மீர்ப்பூரில் ஆசியப்போர் 
மீட்போர் கோலியா தாவனா
ஜெயிப்போர் இந்தியரே என்றாலும் 
வெற்றிக்கு ஒரே ஏணி தோனி 
வெறியுடன் அடிப்பார் எதிரணிக்கு ஆணி
ஆறடித்து ஜெயிக்க வேறு யாரு?!!
உலகக் கோப்பையில் மேலும் பாரு!!


படித்தால் மேதை என்கிறோம் 
அடித்தால் தாதா என்கிறோம் 
நடித்தால் தலை என்கிறோம் 
குடித்தால் தறுதலை என்கிறோம்


This is 'Rumi'tic :
விலகியிருக்கும் போது தான் 
விழையும் வினா உனை அறிந்தேன் 
விரும்பியிருக்கும் போது தான் 
விடையே நீயெனப் புரிந்தேன் 
-பாலசாண்டில்யன்


This Is 'Rumi'tic... 
உனக்குள் கரைந்து என்னைத் தொலைக்கவா 
எனக்குள் உறைந்து உன்னை அழைக்கவா 
ஒளியில் விட்டில் போல் உன்னுள் கலக்கவா 
ஒளியே நீயென உணர்ந்து மலைக்கவா 
- பாலசாண்டில்யன்


This Is 'Rumi' tic - உனக்குள்ளிருக்கும் தணலைக் காற்றூதி நெருப்பாக்கும் என்னைப் புரிந்து நீ ஒளிர்வாய்
 - பாலசாண்டில்யன்.

விதிகளை மட்டுமே பின்பற்றினால் சில நேரம் வாழ்வின் எழில்மிகு விளையாட்டுகளை கைப்பற்றத் தவறி விடுவோம்.

பணக்காரர் என்றாலும் மூச்சு இழுத்து விடுவது காற்றைத்தான்...காசை அல்ல..!!
- பாலசாண்டில்யன்


திரும்பிப் பார்ப்பவர் எல்லாம்
விரும்பிப் பார்ப்பவர் அல்ல..

வளர்த்து ஆளாக்கிட வாழ்வியல் மதிப்பு போதும்
வளர்த்து பாழாக்கிட வாழ்வில் பணம் ஒன்றே போதும்
வெற்றி என்பது எந்தக் கதவு வழியாகவும் வரலாம். ஏற்றுக் கொள்வதும் எதிர்த்து நிற்பதும் அவரவர் மனநிலை.

ஒரு வரிக் கதை:
இன்னைக்கும் இது தானா? வார்த்தை பொறுக்காமல் வீடியோ பார்த்து மலாய் கோப்தா செய்து போட்டோ எடுத்து மகளுக்கு அனுப்பினாள். ஆசையாக மகள் வரும் போது அழுது கொண்டிருந்தாள் அமுதா. கை தவறி மேடை முழுதும் கோப்தா.


ஒரு வரிக் கதை:
வீடு பூட்டிக் கிடந்தது. எங்கே போனார்களோ? கடையில் கொடுத்துச் செய்த சாவியும் பையில் இல்லை. மிகுந்த வெறுப்புடன் பூட்டை இழுத்தால், அட பூட்டவே இல்லை. வேகமாக கிடைத்ததை சுருட்டிக்கொண்டு கிளம்பினேன்.