Saturday, September 1, 2018

Self Confidence Song




                 
                                                                                                                  
சாமி போல காக்க யாருமில்லை
சாவு தானா வாழ்வின் எல்லை
யாருக்குத் தான் இல்லை தொல்லை
எழுந்து நில் துணிவு கொள் துன்பமில்லை

திறனை நினை வழியை நினை
கருணை நிறை கடவுள் துணை
சவால்க ளெல்லாம் தூள் தூளாகும்
நம்பிக்கை யுந்தன் போர் வாளாகும்

நடந்ததைத் திரும்பிப் பாரா முனைப்பு
நடப்பதில் கவனம் முழு நினைப்பு
நாளையென்பது அவன் பொறுப்பு
நம்பு உன்னை கொள்ளாதே வெறுப்பு

இழந்த வாய்ப்பால் இல்லை பெருமை
எழுந்து முன்னேறு வாழ்வு அருமை
இறையின் ஒளியில் உனது வாழ்க்கை
இன்பம் பிறக்கும் இனியேன் அழுகை

- முனைவர் பாலசாண்டில்யன்
9840027810

Krishna Krishna

ராகம்: தேஷ்                     தாளம்: ஆதி 

குழலூதி வருகின்ற கண்ணன் - அன்பர் 
குரல் கேட்டு வருகின்ற மன்னன்  - குழல் 

அழகான சிலை கூட அவன் பாட மயங்கும் 
அமுதூறும் இதழ் நாடி அவன் நாமம் படிக்கும் 
தழுவாத இளந்தென்றல் அவன் நாதம் கொணரும் 
தரும் போதை அவன் கீதம் தேனாக இனிக்கும் - அவன் குழலூதி 

மழைமேகம் போல் எந்தன் மனந்தன்னில் புகுந்து 
மறைந்தோடி ஒயிலாக இருள் தன்னில் பறந்து 
இழைந்தோடும் உன் அன்பில் எனை நானே மறந்து 
இமைமூடி இசைபாடி எடுக்கின்ற விருந்து - காண - கான (குழலூதி)

பாடல் மற்றும் இசை: டாக்டர் பாலசாண்டில்யன்