இன்று தானாய் எனக்குள் ஏனோ தோன்றிய ஆன்மீக சிந்தனை :
மின்சாரம்
பாய்ந்து மின்விசிறி சுற்றுகிறது. விளக்கு எரிகிறது. நாம் இங்கே போற்றுவது
பாராட்டுவது அந்த உபகரணங்களை தான். ஆனால் போற்ற வேண்டியது மின்சாரத்தை
தானே...! காண்கின்ற உபகரணங்கள் நமக்கு சிறப்பாகப் படுகிறது. கண்ணில் படாத
மின்சாரம் மனதில் புரிவதில்லை.Sunday, July 28, 2013
A spiritual insight - by Dr.Balasandilyan
Sunday, July 21, 2013
Few poetic thoughts
ஈரமில்லா மனமும் காய்ந்த பூமியும்
இங்கே
பூமி
அழுத
போது
அங்கே
அணை
மூடப்பட்டது
அங்கே
வானம்
அழுத
போது
அவசரமாய் அணை திறக்கப்பட்டது
______________________________________
நனைத்தேன் வந்தாய்
ஜலதோஷம்
நினைத்தேன் வந்தாய்
சந்தோஷம்
____________________________________
எச்சரிக்கை
குடையை
விரி
பூக்கூடையாய் சிரி
நனைந்தால்
காதல் ஜுரம் கவ்வும்
____________________________
ஏய்
வானவில்லே நனைந்து விடாதே
வண்ணங்கள் சாயம் போகும்
வானத்துக்கு காயம்
வரும்
________________________________
காருக்குள்
மழையும்
நானும்
நனையாமல் !
_________________________
மழை
நினைந்து பார்த்தால்
கிடைக்காது சுகம்
நனைந்து பார்த்தால்
கிடைக்கும் சுகானுபவம்
_________________________________________
காலி
வேலியே
போலியென்றால்
பயிரெல்லாம் காலி
தானே
கூலிகள் ஜாலியாயிருந்தால்
வயிரெலாம் காலி
தானே
வாலியே
பலமிழந்தால்
கவிபதவி காலி
தானே
?
_______________________________________________
Saturday, July 20, 2013
Let us recognize people when they are alive
வயதானவர்கள், வாழ்க்கையில் சாதித்தவர்கள் ஒவ்வொருவராக இவ்வுலகை விட்டு கிளம்புகிறார்கள்.
சாதித்த சிலருக்கு உரிய பாராட்டு அங்கீகாரம் இன்னும் நாம் கொடுக்காமல் இருந்திருக்கலாம் .Friday, July 19, 2013
Change is growth
மாறலாம் மாற்றலாம்
- டாக்டர் பாலசாண்டில்யன்
Thursday, July 18, 2013
On Poet Vaali
வாலி மறைந்தார் வலி நிறைத்தார் சினி உலகில்
வேலியில்லாத தோட்டங்களில்லை
கூலியில்லாத வேலையுமில்லை
மாலியில்லாத இசையுலகில்லை
கோலி ஆடாத குழந்தையுமில்லை
நூலிழையில்லாத சேலையுமில்லை
போலிகளில்லா பொருள்களுமில்லை
லாலி பாடாத தாய்களில்லை
வாலி இல்லாது இனி திரையிசை உண்டா ?
பட்டு ஜிப்பாக்கள் பலர் போடலாம்
பாட்டு வாலி போல் எவர் பாடுவார், எந்த மெட்டுக்கும் அவர் பாடுவார்
நாக்கு சிவக்க பலர் சிரிக்கலாம்
நாதம் மணக்க இனி யார் சிறப்பார் ? கவி உலகில் யார் பிறப்பார்?
எந்த வயதையும் வசம் இழுக்க
செர்ந்த வரிகளை இனி யார் எழுதுவார்
சினி உலகமே அழுகுது பார் !
நெற்றிப் பொட்டில் அடித்தது போல் பேசுவார்
நெற்றிப் பொட்டொடு நிதம் வலம் வருவார்
சுற்றி முற்றி பார்த்தாலும் சீன் சொன்னவுடன்
சற்றென பாடல் தர இனி யார் வருவார்
TMS PBS ராமமூர்த்தி முதலில் செல்ல
வால் போல தொடர்ந்து சென்றார் வாலி
தமிழ் திரையுலகிற்கு ஏன் அடி மேல் அடி
அமிழ்கின்ற ஆழியில் ஆடிடும் படகோ ?
நரம்பு மீட்டூம் நாத சங்கீதத்திற்கு
வரம்பு மீறாத வரிகள் தந்தவர் மறைந்தார்
மறைந்த பின் புலம்பல்கள் ஆயிரம் செய்தாலும்
மறையாது அவர் புகழ் தான் மகிமை அதுவே !
நிறைந்திடும் மனம் அவர் பாடல் கேட்டால்
இறைவா அக்கவி ஆன்மா அமைதி பெறச்செய் !
இறைவா அக்கவி ஆன்மா அமைதி பெறச்செய் !
- டாக்டர் பாலசாண்டில்யன்
Wednesday, July 17, 2013
Subscribe to:
Posts (Atom)