Sunday, August 14, 2016

இந்தியா 2047

உரத்த சிந்தனை வெளியிட்ட "ஆனந்த சுதந்திரம் 50"
சுதந்திரப் பொன்விழா கவிதைகள் நூலில் இருந்து 
டாக்டர் பாலசாண்டில்யன் எழுதிய கவிதை (ஆகஸ்ட் 1998 பதிப்பு )

இந்தியா 2047
--------------------------

ஆண்கள் பெண்கள் என 
அனைவரின் கைகளில் ஒயிலாக கைபேசி 
நடை மறந்த கால்களுடன் 
மணிபர்ஸ் நிறைய கடன் அட்டைகள் நிரப்பியபடி 

பெண்கள் ஜீன்ஸில் பீடுநடை 
- உயர் காவல் துறை அதிகாரிகளாய் 
- நாடாளுமன்ற உறுப்பினர்களாய் 
- விமான ஓட்டுனர்களாய் 
- தொழில் அதிபர்களாய் 

டீசல் பெட்ரோல் இல்லா 
பாட்டரி கார்கள் தெருக்களில் பறக்கும் 
புகை நமைச்சல் கண்கள் மறக்கும் 
புதிய பல மேம்பாலங்கள் வந்து அதன் மேல் 
பறக்கும் ரயில்கள் பல்லவனை ஒழிக்கும் 

அமேரிக்கா இந்தியர்கள் ஆளுமையில் 
புதிய பல நிறுவனங்கள் நம் வசம் இருக்கும் 
அவை ஆண்டுக்கு இருமுறை போனஸ் அளிக்கும் 

குடிசைகள் என்பது அகராதியில் மட்டுமிருக்கும் 
அடுக்கு மாடிக் குடியிருப்புகள் ஆயிரமாய் மலிந்திருக்கும் 

பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் 
கம்ப்யூட்டர் உடனே வழங்கும் 
வங்கிகள் வைப்பு நிதியை வீடு வந்து வசூலிக்கும் 

பள்ளிச் சிறுவர்கள் பாடப்பை விடுத்து 
டேப்லெட் மட்டும் சுமப்பர் 

லஞ்சம் என்ற சொல்லுக்கு அர்த்தம் 
தெரியாது பிறக்கும் எண்ணிலா இந்தியக் குழந்தைகள் 

இங்கு படித்தவர் இங்கே தொழில் செய்வர் 
என்றும் இந்தியராய் ...அகிலத்தை வென்றவராய் ..!!

No comments:

Post a Comment