Sunday, August 14, 2016

இந்தியா 70 புதிய கவிதைகள்

இந்தியா 70
புதிய கவிதைகள் - டாக்டர் பாலசாண்டில்யன்
கணிதம் யோகா மருத்துவம் கலாச்சாரம் - உலகோர்க்கு
கற்றுத் தரும் இந்தியா என் தேசம்
நல்லரசு நாட்டின் புதல்வரெலாம் அறிஞர் - அதனால்
வல்லரசு ஆனதின்று வானவரும் அறிவர்
உலகோரின் உயர்ந்த புருவம் இறங்கவில்லை
உயர்ந்தோர் உழைப்போர் வேறெங்கும் பிறக்கவில்லை
ஆண்டவனே ஆண்ட தேசம் பாரதம் - எத்தனை
ஆண்டுகள் ஆயினும் மாறுமோ வேர் அதன் ?
அறிவியலின் ஆன்மிகத்தின் ஆணிவேர் இந்தியா
அகிலத்து வர்த்தகத்தின் அச்சாணி இந்தியா
யாருக்கும் முன்னோடியாய் ஓர் உன்னதம்
பாருக்குள் ஒரு தேசம் நம் பாரதம்
பாரதத்தாய்
அழகும் அறிவும் கலந்த நவமணி
உழைப்பும் உயர்வும் இணைந்த பெண்மணி
அன்பும் அமைதியும் கனவாகி விட்ட - உலகில்
பண்புடன் உயர்ந்து நிற்கும் பாரதம் பாரீர்
கல்வி மருத்துவம் தொழில்நுட்பம் கலைகள்
கலாச்சாரம் இவற்றின் சுருக்கமே இந்தியா
இந்தியா
உழைப்பின் வாசம் வீசும் தேசம் - இங்கு
உயர்வே ஒவ்வொருவரின் சுவாசம்
கடலில் கலக்கா இந்திய நதியே வியர்வை - அது
கடின உழைப்பில் ஒளிர்ந்து நிமிர்த்தும் உயர்வை
எழுவது என்பது உழைப்பின் அடையாளம் - இந்தியா
எழுபது என்பது உதிரிரத்தின் அடையாளம்

No comments:

Post a Comment