Thursday, August 4, 2016

Recent composition of Balasandilyan

காதல் பூமிக்கு அச்சாணி நீ 

என் புலம் சற்று நிற்கின்றது 
என் நிலம் சுற்றி வருகின்றது 
உன் பார்வை என்மீது பட்டால் 
உன் வாசம் எனைத் தீண்டி விட்டால் 

என்ன என்ன இன்னும் செவ்வாய் 
எனையென்று முழுதாகக் கொய்வாய் 
மறக்க முடியா உன் செவ்வாய் - எனை 
மயக்கித் தருமா அமுத மழையாய் 

பருவ மாற்றம் வானிலும் மனதிலும் -இரு 
துருவ மாற்றம் அகமும் புறமும் 
மாறுமா நெருப்பு நீராக வந்து 
மாற்றிப் பார் ஓர் அணைப்பைத் தந்து ..

வெயிலுக்கு நிழலாக வருகின்ற நீ 
மழை போல மனதினைக் குளிர்விக்கிறாய் 
அலை போல வந்து வந்து போகாதே 
அலைந்திட  இனி என்னால் ஆகாதே 

போக்கிரி மனதைத் திருத்த முடியமா - அதன் 
போக்கைத் தான் நிறுத்த முடியுமா 
சாக்கினி சொல்லாது முடிவுகள் வருமா - இல்லை 
காதல் சாவையே  பரிசாகத் தருமா 
- டாக்டர் பாலசாண்டில்யன் 

No comments:

Post a Comment