Thursday, November 17, 2016

Some Tamil Quotes

சிலர் சொல்லில் வைப்பார் முள்ளை.
சிலர் சொல்லில் வைப்பார் கள்ளை.
சிலர் சொல்லில் இன்பம் கொள்ளை
சிலர் சொல்லில் இன்றும் பிள்ளை

கண்களில் தெரியும் வெறி 
மனதில் தெரியும் குறி 
அதுவே வெற்றிக்கு அறிகுறி

புழுவாக பற்றிக் கொள்வதும், பூச்சியாக பறந்து செல்வதும் இயற்கையின் ஏற்பாடு தான். மனிதனாக நமது இயல்பு அறிவோம்.

ஒரு தொந்தரவு தரும் எண்ணம்
பத்தாயிரம் கவனச் சிதறல்களை உருவாக்கும்...!
எண்ணங்களில் கவனமாய் இருப்போம் !

கடினமான வாழ்க்கையில் பிரார்த்தனை என்பது இயலாத காரியம். ஆனால், பிரார்த்தனை செய்து விட்டு தொடங்கினால் இயலாத கடினமான காரியமும் எளிதான ஒன்றாகிறது.

மற்றவர்களை பற்றிய நமது
ஒவ்வொரு எரிச்சலும்
நம்மைப் பற்றிய புதிய புரிதலாகவே இருக்கிறது...!

எனக்கு மழை பிடிக்கும் என்றவர்கள் குடை பிடித்து நிற்கிறார்கள்
எனக்கு வெயில் பிடிக்கும் என்றவர்கள் நிழல் தேடி அலைகிறார்கள்
எனக்கு காற்று பிடிக்கும் என்றவர்கள் ஜன்னலைச் சாற்றுகிறார்கள்

கோட்டை போட்டுக் கொண்டு அரசைப் பிடிக்கலாம். அரசைப் பிடித்த பிறகு கோட்டை விடக் கூடாது.

குழந்தைகளுக்கு இல்லை கவலை 
கட்டுக்களை மாற்றிட.. 
கட்டுக்குள் அவர்களை 
வைக்க வேண்டாம் இன்று மட்டும் 
இறைவன் அவர்களுள் இருப்பதால்.. 
கொண்டாடும் தினமின்று


எல்லா(ர்) கூரையிலும் கீறல் இருக்கிறது. அதனால் தான் ஒளிக் கீற்றுகள் உள்ளே நுழைகின்றன.

உங்கள் சந்தோஷத்தின் சாவியை 
மறந்தும் அடுத்தவர் சட்டைப்பையில் 
போட்டு விடாதீர் !


வாழ்க்கையெனும் வீணையில் அனுபவம் எனும் நரம்பை மீட்டினால் கிடைப்பது சொத்து. குறைவு என்றால் கெத்து. அதிகம் என்றால் வெத்து..ஆபத்தும் தான்.

தொலைநோக்கு பார்வையை 
கொலைநோக்கு பார்வையாக 
பார்க்கின் தொல்லை தான்..


வீட்டில் உப்பு பருப்பு சொம்பு எல்லாம் இருந்தாலும் பேச்சில் அன்பு இல்லை என்றால் எந்தப் பலனும் இல்லை.

விடிந்ததும் மடிந்தன 
காகிதங்கள் 
காரணங்கள் நேற்று 
காரியங்கள் நாளை



நேற்று செல்லுபடி ஆனது இன்று செல்லா நிலை ஆனதே அதுபோல வாழ்வின் ஆயுள் உட்பட எல்லாமே தற்காலிக நிரந்தரம். நிரந்தரமாக தற்காலிகம். தத்துவம் உரைத்தது அன்றும் இன்றும் நரேந்திரரே.

செய்த பாவங்களுக்காக அடித்த ஆணிகளை ஒவ்வொரு நல்ல காரியம் செய்த போதும் பிடுங்கி எறிந்தாலும் ஆணித்தரமாக பதிந்து போன ஆணியின் தழும்புகள் ஆத்மா தனை ரணமாக்குகிறது என்றுணர்வோம்

தேவையெனும் போது மட்டும்
உங்களை நாடுகிறார்களா
வருத்தம் வேண்டாம்
திடீரென இருள் சூழும் போது
மெழுகுவர்த்தியை தானே
தேடுகிறோம்....
வருத்தம் தவிர்
பெருமிதம் கொள் ...!

இருக்க வேண்டும் ( உயிரோடு உயர்வோடு) என்றால் என்னென்ன இருக்க வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்பது புரிந்திடல் வேண்டும். இருப்பது சரியாக இருந்தால் இருக்கலாம்.




No comments:

Post a Comment