Thursday, November 17, 2016

Planning

எதைப் பற்றியெல்லாம் திட்டமிட வேண்டும் ?
- உடல் ஆரோக்கியம் 
- பண வரவு - செலவு - சேமிப்பு 
- மன அழுத்தம் - பாதுகாப்பின்மை 
- தனிமையைச் சமாளித்தல் 
- தள்ளாமை பற்றியும் தள்ளிபோடுவது பற்றியும்
- பணியின்மையால் ஏற்படும் மனக் கலவரங்கள்
- எந்த வருமானத்திலும் மகிழ்ச்சி
- கனவுகளை நனவாக்குதல்
- குடும்பம்/வீடு/நண்பர்கள்/அந்தஸ்து/சமூகம்/ஆன்மிகம்/ஆகியவற்றை சமாளிப்பது
- தியானம்
- எதிர்பாராத விஷயங்கள்
- மகன் அல்லது மகள் படிப்பு மற்றும் திருமணம்
- பல்வேறு அமைப்புகளில் சேர்ந்து செயல்படுதல்
- சமூகப் பணி
- புத்தகம் எழுதுதல்
- வெளியூர் செல்ல
- பிரார்த்தனை நிறைவேற்ற
- வீடு மற்றும் இதர சொத்து வாங்க விற்க
- வேலையில் அல்லது தொழிலில் மேம்பட
- பிடித்ததை செய்ய
- நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு செல்ல
- விடுமுறை கொண்டாட
இப்படி பட்டியல் நீளுகிறது.


பணி ஓய்வுக்குப் பிறகு செய்வது அவசியம் :
- நேரத்தில் குளிப்பது 
- காலை உணவு மற்றும் மருந்து உட்கொள்ளல் 
- நடப்பது, புத்தகம் படிப்பது, நண்பர்களை தொடர்பு கொள்ளல் 
- முடி, நகம் வெட்டுதல்
- மீசை தாடி சரி செய்து கொள்ளுதல்
- சரியான 'பளிச்' உடைகள் அணிவது
- வாய் துர்நாற்றம் இன்றிப் பார்த்துக் கொள்வது
- அநாவிசியமாக சாப்பிட்டு வியாதி வராது காத்தல்
- சேமிப்பு மற்றும் பண விஷயங்களில் கவனமாக இருத்தல்
- யாரையும் சார்ந்து இல்லாது இருத்தல்



ஓய்வு பெற்ற பெண்கள் :
- தனக்கு தெரிந்த பாடல்கள், ஸ்லோகங்கள் அக்கம் பக்கத்தவருக்கு சொல்லித் தரலாம்
- கைத்திறன் காட்டும் படி பொம்மை, தையல், எம்ப்ரோடயரி செய்யலாம்
- பேரன் பேத்திகளுக்கு கதைகள் சொல்லலாம்.
- கோவில்களுக்கு செல்லலாம்
- பத்திரிகைகளில் சிறு குறிப்புகள் எழுதலாம்.
- சமூகப் பணிகளில் ஈடுபடலாம்.

No comments:

Post a Comment