Wednesday, July 16, 2014

My recent song on Mother and Father

About Mother
அம்மா அம்மா அகிலம் நீயே அம்மா 
நீ எத்தனை அறிவானவள் 
நீ எத்தனை அழகானவள் 
அன்பானவள் நீ அம்மா என் அம்மா என் அம்மா 

இவ்வுலகம் முட்காடு  நிறைந்தது 
எனக்கு நீ தானே பூப்பாதை அம்மா 
அன்பானவள் நீ அம்மா என் அம்மா என் அம்மா 

துக்கம் நிறைந்த உன் கண்கள் 
தூக்கம் இன்றி  நாளும்  மலர்ந்திருக்கும் 
நான் துயில உனது விழி ரோஜா  வாடாது மலர்ந்திருக்கும் 
நீ உறங்கிடாத தியாகத்தில் தானே   என் உடல் வளர்ந்திருக்கும் 
நீ எத்தனை அறிவானவள் 
நீ எத்தனை அழகானவள் 
அன்பானவள் நீ அம்மா என் அம்மா என் அம்மா 

உனக்கென்று ஏது உணர்வுகள் உண்டு அம்மா 
நான் சிரித்தால் நீ சிரிப்பாய்..நான் அழுதால் நீ அழுவாய் 
என் சிரிப்பும் அழுகையும் மட்டுமே உன் அகிலம் என்பாய் 
என் தியாக தீபமே சிரித்திடுவாய் அம்மா 

அம்மா குழந்தைகளின் உயிர் தானே என்றும் 
அதிர்ஷ்டம் உள்ளவருக்கு அம்மா இன்றும் என்றும் 
அழகானவள் அன்பானவள் சகலமும் அகிலமும் அவளே 

நீ எத்தனை அறிவானவள் 
நீ எத்தனை அழகானவள் 
அன்பானவள் நீ அம்மா என் அம்மா என் அம்மா 
 ----------------------------------------------------------------------------------------------------
About Father
எனது கனவை உனது கனவாய் எண்ணி உணர்ந்து 
நனவாய் ஆக்கி மகிழ்கின்றாய்...
அப்பா எல்லாம் நீயே சகிக்கின்றாய் ...
எம்மிடம் எதை நீ உரைக்கின்றாய் ...?

உன்னிடம் ஆடை குறைவாய் இருப்பதுவா உன்  கவலை 
எமக்கு குறையே  இன்றி இருப்பது தானே உனது  கவலை 
கடைகள் சென்றாலும் வாங்குவது என்னவோ எமக்குத் தானே 
அப்பா எல்லாம் நீயே சகிக்கின்றாய் ...
எம்மிடம் எதை நீ உரைக்கின்றாய் ...?

சுகமோ துக்கமோ உன் கண்களில் என்றும் தெரியாது 
சுகமே யாம்  பெற  பிரார்த்தனைஉன் மனம் வேறு அறியாது 
கோபமாய் யாம் பேசினால் புன்னகை தானே உனது பதில் 
அப்பா எல்லாம் நீயே சகிக்கின்றாய் ...
எம்மிடம் எதை நீ உரைக்கின்றாய் ...?

எமக்காக நீ உன் உயிர் விடக் கூட தயங்க மாட்டாய் 
எவர் வந்தாலும் எதிரில் எமக்கிடர் வந்திட விட மாட்டாய்  
எமை நோக்கி ஒரு தூசி வந்தாலும் இமை போல்  நீ காக்கின்றாய்  
அப்பா எல்லாம் நீயே சகிக்கின்றாய் ...
எம்மிடம் எதை நீ உரைக்கின்றாய் ...?

No comments:

Post a Comment