நீளும் உந்தன் நேயம் மீளும் எந்தன் நேரம்
நாளும் புதிய மாயம் ஆறும் எனது காயம்
வாசமலராக வாசல் வந்து நிற்கும் நதியே
பாசவலை காட்டி பாடித் திரியும் ஜதியே
ஆசைமேலோங்க அலையும் எந்தன் ரதியே
ஓசையில்லாமல் எனைச் சேரவந்த நிதியே
கோடானு கோடி முகம் கண்டபின் சிரித்தாயே
தேடாமல் எனையடைய யுகங்கள் பல பொறுத்தாயே
வாடாமல் உயிர் தழைக்க பாசமழை பொழிந்தாயே
நாடாமல் நின்னுயிரை நேயமுடன் அளித்தாயே
முறைகள் தெரியாத வயதை மொழிபெயர்த்தாயே
குறைகள் இல்லாத பொழுதை எனக்களித்தாயே
உரைகல் போன்ற மனதை உருக்கிவிட்டாயே
நிறைகள் ஓங்கும் வாழ்வாய் நீயிருப்பாயே
- டாக்டர் பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment