Saturday, August 22, 2015

#Food Security

உணவுப் பாதுகாப்பு:
இது ஒரு பயம் தரும் விஷயம் 
நிலம் ஒரு ஜெயித்துப் பெற வேண்டிய ஒன்று என்பதால் போர் அதிகம் மூண்டது 
அன்று. 
திறமை உள்ள ஆட்கள் பெற வேண்டி ஒரு வித்தியாசமான கண்ணுக்குப் புலப்படாத போர் இப்போது நிகழ்ந்து கொண்டு இருக்கிறது 
நாளை உணவுத் தட்டுப்பாட்டினால் நிச்சயம் போர் நிகழும்.
மாடுகள் போஸ்டர் காகிதம் தின்பது போல் மனிதனும் எதையும் தின்பான் நாளை 
விவசாயம் பற்றிப் பேசுகிறோம் 
யார் செய்யப் போகிறார்கள் விவசாயம் எல்லோரும் கணினியை கையில் எடுத்தால் (கலப்பை யார் பிடிப்பார்? இரைப்பை யார் நிறைப்பார் ? பொறுப்பை யார் சுமப்பார் ?)
சாகுபடி பற்றி இல்லை பேச்சு, போன் தள்ளுபடி பற்றித் தான் 
ஆடிப் பட்டம் தேடி விதை அன்று. ஆடித் தள்ளுபடியில் மோதி வாங்கு இன்று.
எதுவும் எல்லாமும் வாங்குவோம் நாளை உணவு தவிர ...
எல்லோருக்கும் உணவை எப்படி இறக்குமதி செய்வது?
அதிக நிலமும், அதிக நதிகளும், அதிக மக்களும் இருக்கும் நாம் பசித்தால், மெளனமாக இருப்போமா ? இறப்போமா ?
பிராணன் எனும் உணவும், நீர் எனும் ஆகாரமும் போதாதே 
தொழில் நுட்பம் இருப்பதால் குறைவான நாட்களில் ஆட்களில் நிறைய உணவு உற்பத்தி செய்யலாம். 
எலிகள் தின்பது கூட நமக்குக் கிடைக்கவில்லை என்றால் என்ன ஆகும்?
கிலி தான்...வயிற்றில் புளி தான்...
விழித்தால் பிழைப்போம்.
இல்லாவிட்டால் விழிப்பது கடினம்.
(இன்று எல்லோரும் விரும்பும் சாமியார் ஒருவர் பேசக் கேட்ட போது எனக்கு பயம் வந்தது எதிர்கால உலகைப் பற்றி....அதனால் எழுதினேன்.)
- டாக்டர் பாலசாண்டில்யன் 

No comments:

Post a Comment