Friday, July 29, 2016

காதல் எனும் கோளாறு ...அதற்கு பொறுப்பு யாரு ?

காதல் எனும் கோளாறு ...அதற்கு பொறுப்பு யாரு ?
- டாக்டர் பாலசாண்டில்யன் 

உணவை வீணடித்தால் 
மறுநாள் உணவு கிடையாது என்றாய் 

தம்பியோடு அடிதடி செய்தால் 
தடியடி தந்து மிரட்டினாய் 

தாமதமாக வீட்டுக்கு வந்தால் 
கதவுக்கு வெளியே நிற்க வைத்தாய் 

அம்மாவை அதட்டிப் பேசினால் 
அப்போதே மிரட்டி நின்றாய் 

தங்கையை தொட்டுப் பேசினால் 
சூடு வைப்பேன் என்று உறுமினாய் 

சொல்லாமல் சினிமா போனால் 
காலை ஓடிப்பேன் என சினந்தாய் 

நண்பனோடு ஊர் சுற்றினால் 
அவனோடு போய் விடு என கர்ஜித்தாய் 

படிப்பில் மதிப்பெண் குறைந்தால் 
ப்ரோக்ரேஸ் அட்டையில் கை எழுத்திட மறுத்தாய் 

திருடு பொய் என்ற எண்ணமே 
தீண்டக் கூடாது என்று சத்தமிட்டாய் 

ஏனப்பா காதலிக்கக் கூடாது என்று மட்டும் 
சொல்லாமல் என்னை வளர்த்தாய் சொல் அப்பா சொல் 

இன்று காதல் கப்பல் கவிழ்ந்த பின் 
வாழ்வே முழுகியதாக முடங்கிப் போனேனே 

நான் காதலிக்க மாட்டேன் என நினைத்தாயோ 
நீ காதல் செய்யாமல் வளர்ந்தாயோ 

No comments:

Post a Comment