Friday, April 21, 2017

Tamil Version

கொண்டு வா இன்னொரு மொந்தை 
கொல்லட்டும் அது எனது சிந்தை 
நினைவைப் பற்றிப் பேசுவேன் 
நினைவு எனக்கு வந்தவுடன்.........
கொண்டு வா இன்னொரு மொந்தை 
கொல்லட்டும் அது எனது சிந்தை 
நிறம் பற்றிப் பேசுவேன் எனது 
நிறம் முழுதும் வெளுத்த பின்னர்
கொண்டு வா இன்னொரு மொந்தை 
கொல்லட்டும் அது எனது சிந்தை 
ஒரு முறை பார்த்த காரணம் போதை 
ஒரு முறை முறைத்தாள் பிறந்தது கீதை 
கொண்டு வா இன்னொரு மொந்தை 
கொல்லட்டும் அது எனது சிந்தை 
சத்தியம் இறந்தது நான் என்ன செய்ய 
பைத்தியம் பிறந்தது என் மனம் கொய்ய 
கொண்டு வா இன்னொரு மொந்தை 
கொல்லட்டும் அது எனது சிந்தை 
ஜனமும் மரணமும் இங்கு போராட்டம் 
ஜனித்தது புது எண்ணம் அது நீரோட்டம் 
கொண்டு வா இன்னொரு மொந்தை 
கொல்லட்டும் அது எனது சிந்தை 
வாழ்க்கையே என்றும் தள்ளாட்டம் 
வாழ்வது இம்முறை ஒரு வெள்ளோட்டம் 
கொண்டு வா இன்னொரு மொந்தை 
கொல்லட்டும் அது எனது சிந்தை 
(பங்கஜ் உதாஸ் கேட்டதன் பயன்)
- டாக்டர் பாலசாண்டில்யன் 

No comments:

Post a Comment