கொரோனா காலத்தில் யாருக்கெல்லாம் திண்டாட்டம் ?
- பாலசாண்டில்யன்
- பள்ளிகளுக்கு, நண்பர்கள் வீட்டுக்கு, அருகில் உள்ள பூங்காவிற்கு போக முடியாத சிறுவர்களுக்கு
- தொடர்ந்து வேலை பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ ஓட்டுனர்கள், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகன ஓட்டுனர்கள், மருந்து கடைக்காரர்கள், காவல் அதிகாரிகள், முன்களப் பணியாளர்கள், கார்பொரேஷன் ஊழியர்கள்
- தபால் நிலைய ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள்
- உணவு மற்றும் முக்கிய பொருட்களை இல்லத்தில் டெலிவரி செய்யும் டென்ஸோ, ஸ்விக்கி ஊழியர்கள்
- வீட்டில் இருந்தே கடினமான சூழலில் உழைக்கும் 'ஒர்க் பிரம் ஹோம்' ஊழியர்கள்
- ஊடக நண்பர்கள் (பிரிண்ட் மற்றும் டிவி மீடியா)
- அரசு ஊழியர்கள், பெட்ரோல் பங்க் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள்
- வீட்டில் உடல்ரீதியாக கஷ்டப்படும் முதியவர்களை வைத்துக் கொண்டு சிரமப்படும் பிள்ளைகள்
- முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்
- மிகுந்த சிரமத்துடன் வணிகம் நடத்தும் சிறு குறு மற்றும் நடுத்தர பத்திரிகைகள்
- இன்னும் பரீட்சை எழுத முடியாமல் தவிக்கும் +2 மாணவ மாணவிகள்
- படிப்பு முடிந்து வேலை கிடைக்குமா என்று தவிக்கும் இளைஞர்கள்
- யாரையும் சந்திக்க முடியாமல் உள்ளுக்குள் முடங்கிக் கிடக்கும் முதியவர்கள்.
- எல்லாவற்றையும் விட ஏற்கனவே பல ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கி அடுத்த வேளைக்கு என்ன சமைக்கலாம் என்று சிந்தித்து, சமையல் செய்து, துணி துவைத்து, வீட்டில் தொடர் சேவை செய்யும் இல்லத்தரசிகள். (நன்றி பாராட்டு எதிர்பாராத பாவப்பட்ட ஜென்மங்கள்)
யாருக்கு கொண்டாட்டம் ?
- கண்டபடி விலை ஏற்றி விற்கும் காய்கறி மற்றும் பழ வியாபாரிகள்
- உயிர் காக்கும் மருந்துகளை (மாஸ்க், ஆக்சி மீட்டர், தெர்மா மீட்டர் உட்பட) இஷ்டத்திற்கு விற்கும் வணிகர்கள்
- உயிர் இழந்த பிறகும் செம்மையாக பணம் கறக்கும் தனி நபர்கள்
- தினம் ஒரு 'பிரேக்கிங் நியூஸ்' போடத் துடிக்கும் சில மலிவான ஊடகங்கள்
- தோன்றியதை எழுதி சமூக வலைத்தளங்களில் வதந்தி மற்றும் பயத்தை கிளப்பி விடும் விஷக் கிருமிகள்
- பாட்டரி, பெட்ரோல், பொருட்கள் திருடும் கயவர்கள்
No comments:
Post a Comment