Tuesday, January 7, 2020

வா வந்து தழுவு
மீண்டும் இரவு
வா வந்து தழுவு
பின்பு நீ நழுவு

மீண்டும் இவ்விரவு
வரலாம் வராமல் போகலாம்
இந்த ஜென்மத்தில் நம் சந்திப்பு
இல்லாது போகலாம்
மீண்டும் நாம் எதுவும்
சொல்லாது சாகலாம்

வா வந்து தழுவு
மீண்டும் இரவு
வா வந்து தழுவு
பின்பு நீ நழுவு

இக்கணம் ஏனோ
நமது வசம்
நம் பேரதிர்ஷ்டம்
வா என்னைப் பார்த்துச் செல்
மனதாரக் கண்டு கொள்
மிக அருகில் ...வான் நடுவில்

வா வந்து தழுவு
மீண்டும் இரவு வா
வந்து தழுவு
பின்பு நீ நழுவு

நிகழுமா இந்நிகழ்வு
மீண்டும் வாழ்வில்
வருமோ வராதோ
இன்பம் தராதோ
கையை மாலையாக்கி
கழுத்தில் நீ போடு
ஆனந்தக் கண்ணீரோடு

வா வந்து தழுவு
மீண்டும் இரவு
வா வந்து தழுவு
பின்பு நீ நழுவு

கண்களால் எனைக்கடத்து
அன்பு மடியில் நிறைத்து
இப்பாச மழை
நமை நனைக்க
நினைந்திருப்போம் நம் உறவை
நனைத்து  நிற்போம் இந்த இரவை

வா வந்து தழுவு
மீண்டும் இரவு வா
வந்து தழுவு
பின்பு நீ நழுவு

மீண்டும் இவ்விரவு
வராமல் போகலாம்
இந்த ஜென்மத்தில்
நம் சந்திப்பு
இல்லாது போகலாம்
- பாலசாண்டில்யன்

(Heard Lag ja gale....several times...could not resist writing this)

No comments:

Post a Comment