மனதை நிலையில் வைக்காக் காதல்
மயக்கம் நிறைந்தது பைத்தியமானது
மகிழ்ச்சிக்கும் மனத் துயரத்திற்கும் - என்றும்
மனதுள் பாடல்கள் நல்ல வைத்தியமானது
பரிவின் முடிவாய் மன்னிப்புக் கேட்பாய்
ஏரியும் தீயாய் கோபமும் சேர்ப்பாய்
எங்கே நீ நான் சொல்வதைக் கேட்பாய் - சட்டென
எளிதில் மறைவாய் காற்றாய்ப் பறப்பாய் (மனதை)
மறைவில் இருந்தே எனை நீ பார்ப்பாய்
மறைந்திருந்தாலும் உனை நான் பார்ப்பேன்
சிறை வை என்னை சிந்தையில் அழகாய் - நீ
சிரித்தால் சாவேன் மீண்டும் பிறப்பேன் (மனதை)
நாணிச் சிவக்கிற உனது முகம் தான்
நான் கரையேற கலங்கரை விளக்கு
நான் தான் உனக்கு நாணம் விலக்கு - வா
நானிலம் நமக்கு துணையாய் இருக்கு (மனதை)
- பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment