Tuesday, January 28, 2020

பித்தமும் சித்தமும்


மனதை நிலையில் வைக்காக் காதல் 
மயக்கம் நிறைந்தது பைத்தியமானது 
மகிழ்ச்சிக்கும் மனத் துயரத்திற்கும்  - என்றும் 
மனதுள் பாடல்கள் நல்ல வைத்தியமானது 

பரிவின் முடிவாய் மன்னிப்புக் கேட்பாய் 
ஏரியும் தீயாய் கோபமும் சேர்ப்பாய் 
எங்கே நீ நான் சொல்வதைக் கேட்பாய் - சட்டென 
எளிதில் மறைவாய் காற்றாய்ப் பறப்பாய் (மனதை)

மறைவில் இருந்தே எனை நீ பார்ப்பாய் 
மறைந்திருந்தாலும் உனை நான் பார்ப்பேன் 
சிறை வை என்னை சிந்தையில் அழகாய் - நீ  
சிரித்தால் சாவேன் மீண்டும் பிறப்பேன் (மனதை)

நாணிச் சிவக்கிற உனது முகம் தான்
நான் கரையேற கலங்கரை விளக்கு 
நான் தான் உனக்கு நாணம் விலக்கு - வா 
நானிலம் நமக்கு துணையாய் இருக்கு (மனதை)

- பாலசாண்டில்யன் 

No comments:

Post a Comment