Tuesday, January 7, 2020

மூதூரில் ஒரு கீதம்

மூதூரில் ஒரு கீதம் - அது முழுதும் சொல்லும் 

எனக்கென்ன கோபம் உங்கள் மீது
வாழ்க்கை ஓர் ஆச்சரியம் தானே 
உங்கள் குழந்தைத்தனம் நிறைந்த 
கேள்விகள் கண்டு நான் வெகுண்டு 
வியந்து  தான் போகிறேன் ..சற்று 
பயந்து தான் போகிறேன்.

ஒரு போதும் வாழ்ந்திட நான் 
வழி தேடவில்லை 
வலியைக் கையாளவே 
நினைத்தேன் அதனை 
வலிய நினைத்தேன்
வேறென்ன செய்ய...வலியைக் கொய்ய 

நீங்கள் சிரித்தால் 
மரியாதை காட்டி 
மறுபுன்னகை வீசிடவே கவிதையாய் 
எனது இதழில் கடனை வைத்தேன் 
ஒரு புன்னகை கடனாய் வைத்தேன்
காய்ந்த கண்களில் கரைந்த நீருடன் 
ஒரு புன்னகை கடலென வைத்தேன்.

உங்கள் துக்கங்கள் வாழ்ந்த  
வாழ்க்கையின் கலங்கரை விளக்கு  
வலி மிகுந்த  உறவை 
காட்டிச் சிமிட்டுகிறது  
கடும் வாழ்வைப் புரிய வைக்கிறது 
வெயிலின் சூட்டினை 
குளிர்தரு நிழலினை 
மாறி மாறிப்  பெறுகிறோம் வேறென்ன ?

இது தானே வாழ்க்கையின் லீலை 
இதை விட அதற்கென்ன வேலை 
இதற்கா கொடுத்தோம் பெரும் விலை 
இதுவே மனதின் தொடர் கவலை 

எனக்கென்ன கோபம் உங்கள் மீது 
வாழ்க்கை ஓர் ஆச்சரியம் தானே 
இத்தனைக்கும் பிறகு 
உங்கள் குழந்தைத்தனமான 
கேள்விகள் கண்டு நான் வெகுண்டு 
வியந்து  தான் போகிறேன் ..சற்று 
பயந்து தான் போகிறேன்.

(Tujhse naaraz nahin zindagi.....Heard it a few times again and again...
and had to put this down in Tamil....so much of inspiration Anup Ghoshal creates)
- பாலசாண்டில்யன் 

No comments:

Post a Comment