Tuesday, January 28, 2020

வருவாயா ?


அதே உன் பார்வைக்கு
இன்றுமெனது காத்திருப்பு
எங்கே நீ சென்றாய் என்று
மனதின் பாரமே தவிப்பு
உனது நெருக்கம் மனதை உருக்கும்
உனது அணைப்போ நெஞ்சை இறுக்கும்
நினைவில் இருக்கும் எனது மயக்கம்
நீங்காதிருக்கும் நீ வருகிற வரைக்கும்
அதே உன் பார்வைக்கு
இன்றுமெனதுகாத்திருப்பு
எங்கே நீ சென்றாய் என்று
மனதின் பாரமே தவிப்பு
உனைக் காணாத மனதின் ஏக்கம்
உள்ளத்தில் நின்று கொல்லும் தாக்கம்
தொலைந்து போனதெந்தன் நிம்மதி தூக்கம்
துரத்திடும் உன் நினைவுகளின் கலக்கம்
அதே உன் பார்வைக்கு
இன்றுமெனது காத்திருப்பு
எங்கே நீ சென்றாய் என்று
மனதின் பாரமே தவிப்பு
உனதன் பிற்காக மறந்தேன் எனதுலகம்
உண்டாச்சு உன்னால் என்னுள் கலகம்
நிச்சயம் வைப்பேன் நெற்றித் திலகம்
நிகழுமா சொல் அந்த அன்புச் சங்கமம்
அதே உன் பார்வைக்கு
இன்றுமெனது காத்திருப்பு
எங்கே நீ சென்றாய் என்று
மனதின் பாரமே தவிப்பு
- பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment